முஹமது அக்பரின் ஷஹாதா

மேற்கு தென் ஆசியா

(அன்று முஹமது அக்பர் இன்று அக்பர் அல் மஸீஹ்) 

மேற்கு தென் ஆசியா இஸ்லாமிய இல்லத்தின் மிகவும் நெரிசலானதும் ஆவிக்குறியதுமான அறையாகும். இந்த அறையில் 186 இனக் குழுக்களைச் சேர்ந்த 300 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.

 சரித்திரம் பூராகவும் ஒரு குழு மற்றக்குழுவுடன், வெளியே ஏகாதிபத்திய சக்திகளுடனும் மோதிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மத்தியில் தேவன் ஆயிரக்கணக்கான இஸ்லாமியரை கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்க்கைக்குள் வழிநடத்தியிருக்கிறார்.

அக்பர் அல் மஸீஹ் என்ற ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய பின்னணி விசுவாசியை ராவல்பின்டி, பாகிஸ்தானில் சந்தித்தேன். தனது சக பஷ்தூன் மக்களைப் போன்று, அவனும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் வாலிபனாக இருக்கும்போது அவனது மக்கள் ருஷ்யாவுடன் யுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.

ருஷ்யாவை தோற்கடித்த பிறகு சுன்னி முஸ்லீம் கோத்திரங்கள் ஷைட் முஸ்லீம் கோத்திரத்தாருடன் மோதிக்கொண்டார்கள்.
 2012 இல் அமெரிக்க படையெடுப்புடன் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக பாகிஸ்தானின் ஸ்லும்ஸ் அகதிமுகாமுக்கு வந்தனர். அக்பரும் அவர்களில் ஒருவன். அங்கு அவன் சந்தித்த ஒரு கிறிஸ்தவ குடும்பம் அவனை சீஷத்துவத்தில் வழிநடத்தி, அவன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவினார்கள். நீ எப்படி கிறிஸ்துவை விசுவாசித்தாய்?” என்று நான் அக்பரிடம் வினவினேன். “பிறப்பில் எனது பெயர் முஹம்மது அக்பர். அதன் அர்த்தம்முஹம்மது மிகப் பெரியவன்என்பதாகும். இது, 19 ம் நூற்றாண்டில் பிரிதானிய படைகளை நாட்டைவிட்டு வெளியேற்றிய மாவீரனுடைய பெயர்.

அநேக அப் கானிஸ்தான் குடும்பங்களில் அவர்கள் மகனுக்கு முஹம்மது அக்பர் என்ற பெயரை வைத்திருப்பதை காணலாம் . அப்பொழுது யுத்தம் நடந்துக் கொண்டிருந்தது. தொழில் வாய்ப்புக்காக ஒரு திறந்த நாட்டை தேடிக்கொண் டிருந்தேன்.
ஒருநாள் திரைப் படம் ஒன்று காண்பிப்பதை கண்டேன். அது ஈஸா நபியை பற்றிய படமாகும். நான் உள்ளே சென்று தனிமையாக படத் தைப் பார்த்தேன் . ஈஸாவைப் பற் றி நான் அறியாத அநேக காரியங்களை அறிந்துகொண்டேன்.” “அவரை அடித்து சிலுவையில் ஆணி அடிக்கும் பொழுது என் உள்ளம் உடைந்தது. நான் என் உள்ளத்தில் சொல்லிக்கொண்டேன், இப்பொழுது ஈஸா பலிவாங்கவேண்டும். வானத்திலிருந்து அக்கினியை அழைப்பித்து அந்த தீய மனிதனை அழித்துவிடவேண்டும்!’

அப்பொழுது, ஈஸா அல் மஸீஹ், அவர்களை கருணையோடு பார்த்து, பிதாவே இவர்களை மன்னியும். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாது

 “நான் என் உள்ளத்தில் சொல்லிக்கொண்டேன் இது எனக்குத்தான் என்று. அன்றிலிருந்து நான் ஈஸாவை பின்பற்ற ஆரம்பித்தேன். இதனை எனது மக்கள் தவறிவிட்டார்கள் என்று நான் அறிவேன். நாங்கள் எப்பொழுதும் பலிவாங்குவதையே நாடுவோம். ஆனால் ஈஸா அல் மஸீஹ் எனக்கு மாற்றுவழியை காண்பித்தார். அதனால்தான் நான் என் பெயரையும் மாற்றிக்கொண்டேன். ‘மஸீஹ்வே மிகப்பெரியவர்!’” என்று அக்பர் அல் மஸீஹ் தனது சாட்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டான்.

ஜெபம் செய்வோம்:

  • மேற்கு தென் ஆசியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட் டுள்ள நாடுகளுக்காக ஜெபிப்போம் .
  • சுமாதானத்தின் குமாரன் கொடுக்கும் புதிய வழியை அவர்கள் கண்டடைய வேண்டும் என் றும் மன்றாடுவோம்.
  • அக்பர் அல் மஸீஹ் போன்ற உட்சாக மூ ட்டும் சாட்சிகளுக்காகவும் அவர்களை சீஷராக்கும் மிஷனரிகளுக்காகவும் ஜெபிப்போம்.
  • மேற்கு தென் ஆசியாவில் வாழும் 300 மில்லியன் முஸ்லீம்களும் இயேசு கொடுக்கிற சமாதானத்தை புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?