Posts

Showing posts from January, 2014

மஸீஹ்வை குறித்து மேலும் ஊக்கமளிக்கும் யஹ்யா நபியின் ஷஹாதா

யோவான் 1:29-30  29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு : இதோ , உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி . 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார் , அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே , அவர் இவர்தான் . எருசலேமிற்குத் திரும்பிய பிரதிநிதிகள் , யஹ்யா நபியைக் குறித்த தங்களுடைய வெறுப்புணர்ச்சியை அப்படியே வைத்து வைத்திருந்தார்கள் . அந்தத் தருணம் வரையில் மஸீஹ் தம்முடைய மக்களை படைத்துத் தூய்மைசெய்யும் ஒரு சீர்திருத்தவாதி என்று யஹ்யா நபி நினைத்திருந்தார் . மஸீஹாகிய ரப்புல் ஆலமீன் நோயுற்ற மரத்தை வெட்டியெறியும் கோடரி என்று எண்ணினார் . இவ்வாறு மஸீஹ்வின் வருகை இறைவனுடைய கோபத்தின் நாளை அறிவிக்கிறது . மஸீஹ் நம் நடுவில் இருக்கிறார் என்று அவர் சொன்னதும் அவரை பின்பற்றியவர்கள் தங்களுடைய பாவங்களை நினைத்து மனவேதனையடைந்தார்கள் . நியாயத்தீர்ப்பாகிய இடி எச்சரிப்பின்றி அவர்கள் நடுவில் விழும் என்று அவர்கள் கருதினார்கள் . முப்பது வயது வாலிபனாகிய மஸீஹ் யஹ்யா நபியினி