Posts

Showing posts from January, 2016

சிருஷ்டி கர்த்தாவும் அல்லாஹ்வும்

Image
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்ற இவ்விரு மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் சொல்லும் பொதுவான ஒரு விஷயம், "வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனை நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்பதாகும். இது ஒரு அடிப்படை விஷயம் என்பதால், இதனை அதிகமாக விளக்கத்தேவையில்லை. இறைவேதமாம் பைபிள் தன் முதல் வசனத்தை தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த வர்ணனையோடு துவங்குகிறது (ஆதியாகமம் 1:1). இன்னும் பல இடங்களில் பைபிளின் இறைவன் தம்முடைய உருவாக்கும் வல்லமையை பறைசாற்றுவதை காணமுடியும் (பார்க்க ஏசாயா 44:24 & யோபு 38:4-6). இதே போல, குர்-ஆனிலும் அனேக இடங்களில் அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.   குர் - ஆன் 6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான் ; அவன் " ஆகுக !" என்று சொல்லும் நாளில் , அது ( உடனே ) ஆகிவிடும் . அவனுடைய வாக்கு உண்மையானது ; எக்காளம் ( ஸூர் ) ஊதப்படும் நாளில் , ஆட்சி ( அதிகாரம் ) அவனுடையதாகவே இருக்கும் ; அவன் மறைவானவற்றையும் , பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் ; அவனே பூரண ஞானமுடையோன் ; ( யாவற்றையும் )

யாரை பின்பற்றப்போகிறீர்கள்?

Image
முந்தைய காலங்களை விட , தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச் செல்வது மிகவும் சுலபமாகும் . புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும் கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன . பழங்காலங்களில் , நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால் , அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும் . அதுபோல்தான் சுவனபதியை அடையவேண்டும் என்றால் அதற்கான வழியை அறிந்தவருடைய உதவியைதான் நாடவேண்டும் என்பது நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கட்டுரையில் ஈஸா அல் மஸீஹ் மற்றும் முஹமது நபியவர்களுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களை நாம் அவதானித்து இருவரில் யார் சுவனம் செல்லும் வழியை நமக்குக் காட்ட தகுதியானவர் என்பதை ஆராய்வோம். ஈஸா அல் மஸீஹும் முஹம்மது நபியும் தங்களின் துன்யா வாழ்க்கையின் முடிவுக்கு பிறகு தங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள் .   ஈஸா அல் மஸீஹ் தம்முடைய வாழ்நாளின் கடைசி வாரத்தில் , அனேக கட்டளைகளை சீடர்களுக்கு கொடுத்தார் . மேலும் சீடர்கள் உற்சாகம்