Posts

Showing posts from June, 2013

ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்

ஈஸா அல் மஸீஹ்        பகுதி    7 ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான் முன்னிருந்த பலிகளின் அடையாளமாகவும் நோக்கமாகவும் இருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய தூய குர்பானின் அடையாளத்துக்கு திரும்புவோம் . அவர் தொடும்போது மனிதன் உயிரடைவது ஆச்சரியமான ஒன்றல்ல . அல்லாஹ்வின் ஆட்டுக்குட்டியாகிய தூய குர்பானின் தொடர்பு மூலம் ஈஸா அல் மஸீஹ் அவர்கள் எமக்கு வாழ்வழிக்கிறார் , குணமாக்குகிறார் , எமது இதயத்துக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருக ிறார் . அவரே குர்பானாக இருக்கிறபடியால் மனிதன் இறைவனின் சந்நிதானத்துக்குள் ( குர்ப் ) செல்லமுடியும் . அவர் மூலம் அல்லாஹ் எமக்கு வாழ்வழிக்கிறான் . ஈஸா அல் மஸீஹ் அவர்கள் இப்படி கூறினார்கள் . “ நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் , அது பரிபூரணப்படவும் வந்தேன் .”                            இன்ஜில் ( யோவான் 10:10) பலியின் தொடுகை மூலம் அல்லாஹ் இறந்தவனை உயிர்ப்பித்ததுபோல, ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை வெளிப்படுத்துகிறான் . ஈஸா அல் மஸீஹ் அவர்களைக் குறித்த