Posts

Showing posts from 2013

ரப்புல் ஆலமீன் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்?

யோவான் 1:25-28  25 அவர்கள் அவனை நோக்கி : நீர் கிறிஸ்துவுமல்ல , எலியாவுமல்ல , தீர்க்கதரிசியானவருமல்லவென்றால் , ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள் . 26 யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக : நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன் ; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார் . 27 அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர் ; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான் . 28 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன . யஹுதிகள் தவ்ராத்திலிருந்து வுழுசெய்தல், மேனியைக் கழுவுதல் மற்றும் ஒரு வகையான குளியல் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள் . மேனியைக் கழுவும் சடங்கு ஒழுக்க ரீதியாக ஏற்பட்ட அசுத்தத்தை நீக்குவதாகும் . ஆனால் ஞானஸ்நானம் என்பது யஹுதியல்லாதவரை சுத்திகரிப்பதாகும் . யூதரல்லா தவர்கள் தூய்மையற்றவர்கள் என்றே அவர்கள் கருதினார்கள் . எப்படியிருந்தாலும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது தாழ்மைக்கும் இறைவனுடைய சமுதாயத்தில் சேர்ந்து கொள்ளுவதற்கும் அடையா