Posts

Showing posts from April, 2014

ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா?

யோவான் 1:31-34  31 நானும் இவரை அறியாதிருந்தேன் ; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக , நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான் . 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது : ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி , இவர்மேல் தங்கினதைக் கண்டேன் . 33 நானும் இவரை அறியாதிருந்தேன் ; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் : ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ , அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார் . 34 அந்தப்படியே நான் கண்டு , இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான் . நபி யஹ்யாவுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து , மஸீஹ்வுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார் . இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது , அப்போது மனந்திரும்பிய மக்கள் மஸீஹ்வின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர் . இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யஹ்யா பார்ப்பார் என்று இறைவன்