Posts

Showing posts from July, 2015

இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி (Part 4)

  //இன்டநெட்ல ஒருத்த// என்று இடையில் நிறுத்திவிட்டு, //நன் முஸ்லிம்கு தஃவா பன்னுர குருப்ல ஜாய்ன் பண்ணினேன்// என்கிறாள் ஆயிஷா என்கிற லித்வின். முகபுத்தகத்தில் அவளுக்கு மாற்று மதத்தினருக்கு தஃவா செய்யும் ஒரு பேஜை ஒருவர் அறிமுகம் செய்துவைத்தார் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இஸ்லாமியரின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதிலை கொடுக்கும் எத்தனையோ பேஜ்கள் இருக்க, இவள் ஏன் இஸ்லாத்துக்கு மதமாற்றும் பேஜை தேர்ந்தெடுத்தாள் சத்தியத்தை தேட? என்ற கேள்வியெழும்புகிறது. மீண்டும் நாங்கள் லித்வினின் சாட்சியின் ஆரம்பத்தில் சொன்ன “ நான் ரொம்ப Stubborn ஆன பொண்ணு ” // என்பதை ஞாபகத்துக்குக் கொண்டுவருவோம். லித்வின் தன்னைப்பற்றி அளவுக்கு அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தாள். தனக்கு வேதாகமம் நன்றாக தெரியும் என்று வீன் பெருமையில் இருந்தாள். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இஸ்லாத்தின் அக்குவேரு ஆணிவேரு எல்லாம் அறிந்தவன் என்ற மமதையில் இருந்தேன். கிறிஸ்தவர்களுக்கு தஃவா (அழைப்பு பணி) செய்ய கிறிஸ்தவத்தை படித்துக்கொண்டிருந்தபோது ஒரு போதகர் இரண்டு புத்தகங்களை கொடுத்தார். ஒன்று ‘காபாவிலிருந்து கல்வாரிக்கு ’

இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி (Part 3)

//நெட்ட தேடி இஸ்லாம் பற்றி படித்தேன்// ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியையாக இருந்தேன். வாலிப கூட்டத்தில் ஊழியம் செய்தேன் என்று சொல்லும் லித்வின், கிறிஸ்தவம் கூறும் கணக்கொப்புவிப்பு என்பதை தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை என்பது இணையத்தளத்தில் இஸ்லாம் பற்றி தேடுவதை அவள் யாரிடமும் சொல்லவில்லை என்பதிலிருந்து காட்டுகிறது. ஒருவன் ஒழுங்கான கிறிஸ்தவ வாழ்வை வாழவேண்டுமானால் அவனால் தனிமையாக வாழமுடியாது. நாள்தோறும் அவன் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து காரியங்களையும் தனது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொறுப்பாக இருக்கின்றவருக்கு ஒப்புவிக்கவேண்டும். பிழைகள் செய்திருந்தால் இருவருமாக சேர்ந்து இறைவனிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மன்னிப்பு கோரி மனந்திரும்பவேண்டும். நாள்தோறும் சந்திக்க முடியாதவர்கள் வாரம்தோறும் சந்திப்பார்கள். இந்த கிறிஸ்தவ அனுபவம் லித்வினின் வாழ்க்கையில் இருந்திருந்தால், அவள் நிச்சயமாக தான் இஸ்லாத்தை பற்றி ஆராய்வதைப்பற்றி கணக்கொப்புவித்திருப்பாள். அப்பொழுது அவளுக்கு இஸ்லாமியர் பைபிளுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில்களை கொடுத்த தளங்களை பார்வையிட வைத்து, சாகிர் நா

இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி

பகுதி 2 “ பாவத்தின் சம்பளம் மரணம் ” என்ற இறைவேதத்தின் வசனம் தன் வாழ்நாளில் வாசித்ததே இல்லை என்பதுபோல் “ஒவ்வொரு ஆத்துமாவும் மரணத்தை சுவைத்தே தீரும் ” என்ற குர்ஆன் வசனம் இஸ்லாத்தை தேட தூண்டியதாக சகோதரி ஆயிஷா என்கிற லித்வின் சொல்வது ஒரு முன்னால் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியை மிகவும் பிரசித்தமான வேத வசனத்தைகூட மனனமிட்டு இருக்கவில்லை என்பதை காட்டுகிறது. பாவமன்னிப்பின் நிச்சயத்தை இவள் பெற்றிருந்தால் இந்த மதமாற்று அரங்கேற்றமே நடந்திருக்குமா? இந்த குர்ஆன் வசனம் இறக்கப்பட்டதாக இஸ்லாமியர் கூறும் சூழ்நிலையை இவள் அறிந்திருந்தால் இந்த வசனத்திலுள்ள பித்தலாட்டம் அப்பட்டமாக தெரிந்திருக்கும். இந்த உலக வாழ்க்கையை சிறைச்சாலையாக நினைத்து வாழ்ந்தால் மறுமையில் வெற்றி கிடைக்கும்// குர்ஆனில் இவ்வுலகிலும் மறுமையிலும் உயர்ந்தவராகக் காட்டும் இயேசு கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, “நான் சிறைச்சாலையில்தான் இருப்பேன் ” என்று பிடிவாதம் பிடிக்கிறாள் இந்த சகோதரி. அதனை அவள் தன் சாட்சியின் ஆரம்பத்திலேயே “ நான் ரொம்ப Stubborn ஆன பொண்ணு ”  சொல்லிவிட்டாள். இஸ்லாம் என்பது சிறைச்சாலை அந்த சிறைச்சாலையிலிருந்து இறைவன் பலரை வ

இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி

Image
இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி (Part 1) கோயம்புத்தூரில் ஒரு கிறிஸ்தவ சகோதரி கடந்த ஜனவரி மாதம் தஃவா சென்டரில் (இஸ்லாமிய மதமாற்று மையத்தில்) சேர்ந்த செய்தி இஸ்லாமியருக்கு பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. அந்த கிறிஸ்தவ குடும்பத்துக்கும் அவர்கள் சார்ந்த சபையாருக்கும் இது பேரிடியாக அமைந்தது. மதமாற்று மையத்தில் தனது படிப்பை முடித்துக்கொண்டு அந்த சகோதரி மேடையேறி கிறிஸ்த பாணியில் தான் இஸ்லாத்தை தழுவிய காரணத்தை சாட்சியாக சொல்லுகிறாள். முகப்புத்தகத்தில் வெளியான அந்த வீடியோவில் அவள் சொல்லும் சாட்சியில் இருந்து கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டிய சில பாடங்களை மேற்கோள் காட்டுவதே இந்த கட்டுரை. சகோதரி லித்வினியை விமர்சிப்பதோ அவளுக்கு அவதூறு சொல்வதோ நமது நோக்கமல்ல என்பதை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தன் அன்பு மகள் பாதாளத்தின் பாதையை, தானே விரும்பி தேர்ந்தெடுத்துக்கொண்டாள் என்ற வேதனையில் வாடும் பெற்றோர், தங்கை, தம்பி, லித்வின் சென்னையில் இருக்கும்போது தன் மகளாகவே நினைத்து வளர்த்த சித்தி போன்றவர்களின் மனங்களை இன்னும் வேதனைப்படும் என்பதற்காக இதனை கண்டுகொள்ளாமல் இருக்கவ