Posts

Showing posts from May, 2014

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின் . யோவான் 1:40-42  40 யோவான் சொன்னதைக் கேட்டு , அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன் . 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு : மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான் ; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம் . 42 பின்பு , அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான் . இயேசு அவனைப்பார்த்து : நீ யோனாவின் மகனாகிய சீமோன் , நீ கேபா என்னப்படுவாய் என்றார் ; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம் . பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா , திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன் . பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும் , மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார் . அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது ; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை . அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார் . ஆ