Posts

Showing posts from March, 2016

பைபிளில் முஹம்மது நபி??

Image
கடந்த 1400 வருடங்களாக இஸ்லாமியர் முஹமது நபியின் பெயரை பைபிளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடியவர்களில் பலரும் இறைவேதத்தின் சத்தியத்தை அறிந்து, விடுதலைப்பெற்று பழைய வாழ்க்கை மாறி புது மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் முஹமது நபியை பற்றி பைபிளில் இருக்கிறது என்பதுதான் உண்மை என்பது கிறிஸ்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவற்றை காண்பித்தால் இஸ்லாமியரின் உள்ளங்கள் புன்படும் என்பதால் அவற்றை காண்பிக்காமல் இருக்கிறார்கள். சத்திய வேதத்தின் சில வசனங்களை வாசித்து முஹமது நபியைப்பற்றி பைபிள் சொன்ன முன்குறிப்புகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள். " நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் , உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன் . ஆகிலும் ,   சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல , உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன் .   எப்படியெனில் , உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

குர்ஆனின் படி சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்? ஸூரா 3:45 அவர்கள் சூழ்ச்சி ( மூல அரபி மொழியில் Wa' makaroo ) செய்தார்கள் , அல்லாஹ்வும்   சூழ்ச்சி   செய்தான் (wa' makara  Allahu). அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன் (wa'Allahu khayru al- makireena ). ( பிஜே மொழிபெயர்ப்பு ) ( அவர்கள் ) திட்டமிட்டுச் சதி செய்தார்கள் ;  அல்லாஹ்வும் சதி செய்தான் ; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் . ( முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு ) ( மேற்கண்ட வசனங்களில் நாம்   அடைப்பிற்குள் அரபி வார்த்தைகளை கொடுத்துள்ளோம் .) குர்ஆன் 3:54 க்கு ஒத்த வசனங்களை 8:30 மற்றும் 27:50 வசனங்களிலும் காணலாம் . சூழ்ச்சி செய்வதில் , சதிசெய்வதில் , வஞ்சிப்பதில் மற்றும் மற்றவர்களை தவறாக வழிநடத்துவதில் எவராலும் மிஞ்ச முடியத ஒருவர் யார் . ஸூரா 4:142 நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர் .  அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான் . அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும் , மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர்