Posts

Showing posts from September, 2013

உங்களுக்கு ஷரீஆவா அல்லது கிருபையா வேண்டும்?

ஈஸா அல் மஸீஹின் செய்தியின் மையம் என்ன ?   யோவான் 1:17-18   17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது , கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின . 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லை , பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் . பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் ஷரீஆவினால் உண்டாகும் நீதிக்கும் கிருபையினால் உண்டாகும் நீதிக்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறலாம் . பத்துக்கட்டளைகளையும் , இரத்த பலிகளைக் குறித்த கட்டளைகளையும் , வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரும் கட்டளைகளையும் இறைவன் மூஸா நபிக்கு கொடுத்தார் . யாரெல்லாம் இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டார்களோ அவர்கள் வாழ்வை பலனாகப் பெற்றார்கள் . ஆனால் அவற்றில் ஏதாவதொன்றையாகிலும் மீறியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் . இவ்வாறு ஒரு மனிதனும் முழுமையானவனாக இல்லாத காரணத்தினால் ஷரீஆ மரணத்திற்கேதுவான நியாயத்தீர்ப்பாக இருந்தது . ஷரீஆவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத காரண