Posts

Showing posts from September, 2015

இறை புத்திரனை ஈமான் கொள்வதா?

Image
  JOHN 3:17-21 யோவான் 3:17 - 21 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் , அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் ; விசுவாசியாதவனோ , தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் , அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் , தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு , ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ , தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு , ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யஹ்யா நபி   தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி , மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார் . ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவி

குர்பான் இறையன்பின் வெளிப்பாடு

Image
யோவான் 3:14 - 16 14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் , 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , உயர்த்தப்படவேண்டும். 16 தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்தியஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். ஈஸா அல் மஸீஹ் தொடர்ந்து நிக்கோதேமுவுக்குப் போதிக்கும்போது , உண்மையான மனந்திரும்புதலும் , மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும் , மனித சமுதா யத்துக்குப் பதிலாளாக மரித்த குர்பானான ஈஸா அல் மஸீஹ்வில் வைக்கும் ஈமானும் இல்லாமல் ஆவிக்குரிய பிறப்பு முழுமை யடையாது என்று கற்பித்தார். இஸ்ரவேலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் குறிப்பிட்டதன் மூலம் ஈஸா அல் மஸீஹ் இந்தக் காரியங்களை நிக்கோதேமுவுக்கு தெளிவுபடுத்தினார். சீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து , அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நட