Posts

Showing posts from 2014

இறை குமாரனும் மனுஷ குமாரனும்

யோவான் 1:47-51  47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து : இதோ , கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார் . 48 அதற்கு நாத்தான்வேல் : நீர் என்னை எப்படி அறிவீர் என்றான் . இயேசு அவனை நோக்கி : பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே , நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார் . 49 அதற்கு நாத்தான்வேல் : ரபீ , நீர் தேவனுடைய குமாரன் , நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான் . 50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக : அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய் ; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார் . 51 பின்னும் , அவர் அவனை நோக்கி : வானம் திறந்திருக்கிறதையும் , தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் . ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய உள்ளான காரியங்களை அறிந்திருக்கிறார் என்பதைக் கண்ட நாத்தான்வேல் திகைப்புற்றான் . முன்னைய வேதங்களின்படி நாத்தான்வேல் ஒரு முஃமினாக கா