Posts

Showing posts from October, 2013

ரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் நபி யஹ்யா

ரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் நபி யஹ்யா யோவான் 1:22-24  22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி : நீர் யார் ? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு , உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள் . 23 அதற்கு அவன் : கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே , நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான் . 24 அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள் . அனுப்பப்பட்டவர்கள் யஹ்யா நபியை நோக்கி கேள்விக் கனைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தார்கள் . மஸீஹ்வின் மெய்யான வருகைக்கு முன்பாக வரும் என்று அவர்கள் எதிர்பார்த்த தவறான உபதேசங்களைப் பற்றியதாகவே இந்தக் கேள்விகள் காணப்பட்டது . ஆனால் யஹ்யா நபி தான் மஸீஹ் அவர்களும் அல்ல , இல்யாஸ் நபியும் அல்ல , முஸா நபியால்   முன்னுரைக்கப்பட்ட நபியும் நானல்ல என்று கூறியதால் , அவர்களுடைய பார்வையில் அவர் தன்னுடைய முக்கியத்துவத்தையும் ஆர்வத்தையும் இழந்தார் . ஆயினும் அவர்கள் அவர் யார் என்றும் அவருடைய செய்தியை கொடுத்