முஸ்லீம்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க நாம் என்ன செய்தோம்?

முதல் ஏழு நூற்றாண்டுகள் முஸ்லீம்களை கிறிஸ்தவ விசுவாசத்துக்கு மாற்றும் மூன்று இயக்கங்கள் காணக்கூடியதாகவுள்ளது. மேலும் ஐந்து நூற்றாண்டுகளாக அப்படியான ஒரு இயக்கமும் இல்லாமல் இருந்தது. ஆயினும்கூட, கடந்த 150 ஆண்டுகளில், முஸ்லீம்களை இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தில் வழிநடாத்திய 82 இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். ஏன் இப்பொழுது? அநேக முஸ்லீம்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க நாம் என்ன செய்தோம்?

சில நேரங்களில் “நாம் என்ன செய்கிறோம்?” என்ற கேள்வியைவிட “நாங்கள் என்ன செய்வதை நிறுத்திவிட்டோம்?” என்ற கேள்வியையே கேட்கவேண்டும். பல நூற்றாண்டுகளாக, முஸ்லிம்களை ஆதாயப்படுத்தும் ஊழியத்தில்; அணுகுமுறைகள் மாறாமல் இருந்திருக்கும். நாம் பெரும்பாலும் “உங்கள் மதம் எதிராக எங்கள் மதம்” அணுகுமுறையையே பயன்படுத்தினோம். பிரச்சனை என்னவென்றால் முஸ்லீம்கள் மிகவும் தூய்மையாகவே தங்கள் மதத்தைப் பார்க்கிறார்கள். ஒரு முஸ்லிம் இஸ்லாத்தைவிடவும் வேறு ஒரு மதத்தை மிகவும் தூயதாக கருதுவது மிகவும் அரிதாகவே உள்ளது. தங்கள் மதம் தங்களுக்கு இரட்சிப்பை கொடுக்காது என்பதை புரிந்துகொண்டாலும் அவர்கள் மதத்தை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார்கள்.

கிறிஸ்தவர்களுடைய இன்னுமொரு அணுகுமுறைதான் “உங்கள் இராணுவத்துக்கு எதிராக எங்கள் இராணுவம்” என்று இஸ்லாமிய படையெடுப்புகளை தடுக்க யுத்தம் செய்ததாகும். அரேபிய பாலைவனத்தில் தொடர் தோழ்விகளை சந்தித்து, தொடர்ந்தும் கிறிஸ்தவ படைகள் பின்தங்கவேண்டியேட்பட்டது. சில யுத்த வெற்றிகளை சந்தித்தாலும் அதனால் இஸ்லாமியர்களை கிறிஸ்தவ விசுவாசத்துக்குள் வழிநடத்த முடியுமானதாக இருக்கவில்லை. அதற்கு மாறாக புனித போர் அல்லது ஜிஹாத் என்ற பயங்கரவாதம் இன்னும் பலம்பெற்றதையே நாம் காண்கிறோம்.

மறுபுறம் கிறிஸ்தவர்கள் படையெடுப்புகளை முறியடிக்க பேரரசுகள் யுத்தங்கள் செய்ததை நியாப்படுத்தலாம். இப்படிச் செய்யுமாறு யார் சொன்னது? “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் ... இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரனாயிருப்பீர்கள்” (மத்தேயு 5: 44-45) என்றே இயேசு கிறிஸ்து சொன்னார். 19-ஆம் நூற்றாண்டு காலனித்துவம், மத்தியகால சிலுவை யுத்தங்களின் தாக்கம் இன்றும் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தை தழுவுவதற்கு கடினமாகவுள்ளது.

இன்று கிறிஸ்தவ தனிநபர்கள் முஸ்லீம்களை தங்களைபோன்றே ஒரு இரட்சகர் இல்லாமல் விழுந்துள்ளவர்கள் என்று பார்க்கின்றனர். குhலினித்துவமும் சிலுவை யுத்தங்களும் ஜிஹாதுக்கு சமமாக இருப்பினும் கிறிஸ்துவின் வழி அதற்கு முற்றும் மாறானதாகவுள்ளது. நாங்கள் உள்ளங்களையும் ஆத்துமாக்களையும் ஆவிக்குறிய ராஜ்யமான தேவ ராஜ்ஜியத்துக்காக வெற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம்.

அதேபோல், எங்கள் மதத்தால் முஸ்லீம்களுக்கு இரட்சிப்பை கொடுக்க முடியாது என்று மிஷனரிகள் நன்றாக கற்றுக்கொண்டுள்ளனர். இரட்சிப்பு நம்முடைய இறைவனிடமிருந்து வருகிறது என்றும் இந்தோ-மலேஷியா, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள இஸ்லாமிய பின்னணி விசுவாசிகளின் சாட்சிகளினால்தான் முஸ்லீம்களை வழிநடத்த முடியும் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். எங்கள் மதம், அரசியல், பொருளாதாரத்தால் இரட்சிப்பு வருவதில்லை. புதிய விசுவாசத்துக்கு அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.

நாங்கள் ஜெபம் செய்வோம்:


  • கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய இராணுவ முறைமையை மாதரியாகக் கொண்டு அதற்கு ஏற்ப பதில் கொடுக்காமல் இருக்க ஜெபிப்போம். (சகரியா 4: 6).
  • கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றவேண்டும் என்று ஜெபிப்போம். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2:6-7) 
  • நாம் கடந்தகால தோல்வியுற்ற உத்திகள் தொடர்ந்தும் பயன்படுத்தாமல் நிறுத்த வேண்டும் என்று ஜெபிப்போம்.  





Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?