Posts

Showing posts from 2015

உன்னதப்பாட்டை குறித்து முன்னால் இஸ்லாமியனின் கருத்து

அல் கிதாபில் (பைபிளில்) உன்னதபாடல் என்ற ஒரு கிதாப் உள்ளது. அது ஆபாச புத்தகம் என்று  நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் (அவர்கள் காபிர்கள் என்று 99 வீதமான இந்திய  இஸ்லாமியர் பத்வா கொடுத்துள்ளார்கள்) என்று தங்களை காட்டிக்கொள்ளும் சிலர்  முகபுத்தகங்களிலும் இணையத்தளங்களிலும், விவாதங்களிலும் ஜும்மா பயான்களிலும்  ஆபாசமாக பயான் செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆபாசாமாக பேசினால்தான் அநேகர் விரும்பி தங்கள் பயான்களை கேட்பார்கள் என்பது  அவர்கள் விரும்பமாக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக முஹமது நபி மூன்று சந்தர்ப்பங்களில்  பொய் சொல்ல அனுமதித்தார். அதில் ஒன்று தன் மனைவியிடம் பொய் சொல்ல முஹமது நபி அனுமதி கொடுத்திருக்கிறார். ஆகவே மனைவியை பொய்யாக வர்ணித்து அவளை  ஏமாற்றலாம். இரண்டாவது இருவருக்கிடையில் சண்டை நடக்கும் போது அவர்களை பொய் சொல்லி சமாதானம் செய்யலாம். மூன்றாவது போர்களத்தில் பொய் சொல்லலாம். மனைவியை பொய்யாக வர்ணிக்கவேண்டும் என்று இந்த அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் தூய இறைவன் தன் உம்மத்தை தனது மனைவிபோல் நேசிக்கிறவர். அதாவது அவர்  தனது சம

இறை புத்திரனை ஈமான் கொள்வதா?

Image
  JOHN 3:17-21 யோவான் 3:17 - 21 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் , அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் ; விசுவாசியாதவனோ , தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் , அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் , தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு , ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ , தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு , ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யஹ்யா நபி   தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி , மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார் . ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவி

குர்பான் இறையன்பின் வெளிப்பாடு

Image
யோவான் 3:14 - 16 14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் , 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , உயர்த்தப்படவேண்டும். 16 தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்தியஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். ஈஸா அல் மஸீஹ் தொடர்ந்து நிக்கோதேமுவுக்குப் போதிக்கும்போது , உண்மையான மனந்திரும்புதலும் , மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும் , மனித சமுதா யத்துக்குப் பதிலாளாக மரித்த குர்பானான ஈஸா அல் மஸீஹ்வில் வைக்கும் ஈமானும் இல்லாமல் ஆவிக்குரிய பிறப்பு முழுமை யடையாது என்று கற்பித்தார். இஸ்ரவேலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் குறிப்பிட்டதன் மூலம் ஈஸா அல் மஸீஹ் இந்தக் காரியங்களை நிக்கோதேமுவுக்கு தெளிவுபடுத்தினார். சீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து , அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நட

இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

Image
“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது !” “இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் . US போற வழிய தேடணும் ” இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் ” என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் ” என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் ” என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்