இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்

நாள் 02                         ஜுலை 11 2013    


 இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்


புது வருடத்தில் பெரிதான ஒரு வாக்குறுதியை ஏற்படுத்தி அதனை நிறைவேற்ற முடியாதபடி தோற்றுபோன அனுபவங்கள் உண்டா ? 1800ம் ஆண்டுகளின் முடிவில் கல்லூரி வளாகங்களிலும், மாணவர் கருத்தரங் களிலும் கேட்கப்பட்ட சத்தம், இந்த தலைமுறையிலேயே உலகத்தை சுவிசேஷத்தினால் சந்திக்க வேண்டும்என்பதேயாகும். 1900ம் ஆண்டுகளின் இறுதியிலும் இதைப் போன்றே: “2000ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மக்கள் கூட்டத்திற்கும் ஒரு சபை மற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் நற்செய்திஎன்ற கேஷம் எழுப்பப்பட்டது.

இருப்பினும் மிகப் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஈஸா அல் மஸீஹ்வின் இறுதிக் கட்டளை 1900ம் ஆண்டுக்குள்ளாகவோ அல்லது 2000மாவது ஆண்டுக்குள்ளாகவோ நிறைவேற்றி முடிக்கப்படவில்லை. ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி 1900ம் ஆண்டில் சுமார் 90 கோடி மக்களுக்கு ஈஸா அல் மஸீஹ்வை பற்றியோ அல்ல நற்செய்தியைப் பற்றியோ அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லாதிருந்தது. 2000ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக மாறி 180 கோடி மக்கள் தொகையாகிவிட்டது. இன்றைக்கு இது 200 கோடியை தாண்டிவிட்டது. அதில் அதிகமானவர்கள் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

நற்செய்தியை விரும்பாத ஒரு உம்மத்திற்கு, நற்செய்திக்கு எதிராக நிற்கிற ஒரு எதிரிக்கு முன்பாக அதை கொண்டு வருவது என்பது மிகப் பெரிய ஒரு சவால். நாம் நடைமுறையில் இச்சவாலை எவ்விதமாக சந்திக்க முடியும் ?

ஒரு குழுவில் அங்கததினர் ஆகுங்கள். ஒரு மிஷன் தலைவர் இவ்விதம் கூறினார்,“நாம் எங்கு போகிறோம் என்பதைவிட யாரோடு போகிறோம் என்பதைக்குறித்து அதிகமாகக் கவலை கொள்ள வேண்டும். ஒரு ஆப்பிரிக்க பழமொழி சொல்லுகிறது, வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாகப் போ, அதிக தூரம் போக வேண்டுமானால் மற்றவரோடு இணைந்து செல்.

விசுவாசம்நமபிக்ப்கை, அன்பு  ஆகியவறறில் விடாமுயறசியுடன் இருங்கள் இன்றைக்கு நீங்கள் இஸ்லாமிய உலகிற்காக ஒரு பெரிய குழுவோடு சேர்ந்து துஆ செய்கின்றீர்கள். அர்த்தமுள்ள துஆ இல்லாமல் இவ்வுலகம் இரட்சிக்கப்பட முடியாது. ஆனால் துஆவானது, இறைவன் நேசிக்கிற இஸ்லாமிய உலகிலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்போடு கூடியதாக இருக்க வேண்டும். ஒரு இறைநேசர், நான் 5% இஸ்லாமிய உலகம் கிறிஸ்து வண்டை வர துஆ செய்கிறேன் என்று கூறினார். ஏன் 5% என்று கேட்டபோது, இறைவன் எனக்கு 5% க்கு விசுவாசம் கொடுத்திருக்கிறார், எனவே நான் அதற்காக துஆசெய்கிறேன், அது நிகழும் வரை அதன் அடிப்படையில் செயல்படப் போகிறேன் என்றும் கூறினார்.


துஆ செய்யவேண்டிய காரியங்கள்.

1.      இஸ்லாமிய உலகில் ஊழியம் செய்து கொண்டிருக்கும் குழுக்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் படியாக துஆ செய்வோம். ஏனென்றால் நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால், அதினால் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள் (யோவான் 13:35), பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் (1 யோ.4:18).
 
2.      சவால்கள் மத்தியில் தாழ்மையுடனும், விட்டுக்கொடுக்கும் தன்மையுடனும் நடந்து கொள்ளவும், இறைவனுடைய திட்டங்களை அறிந்து கொள்ள, பார்க்கும் கண்களும், கேட்கும் செவிகளும் உண்டாகவும் இறைவனுடைய ரஹ்மத்துக்காவும் துஆ செய்வோம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?