ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மை

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 2

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்


). ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மை

ஈஸா அல் மஸீஹ் தம் வாழ்வு முழுவதும் எவ்வித பாவமுமற்றவராக வாழ்ந்தார் என்பதை குர்ஆனிலும் இறைவேதத்திலும் இருந்து நிரூபிப்பது இலகுவானது. ஜிப்ரீல் மரியமுக்கு முன் தோன்றியபோது, அவன் அவளிடம் நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”)” (சூறா 19:19) என கூறியதாக குர்ஆன் கூறுகின்றது. “பரிசுத்தமான என்பதற்கான அராபிய வார்த்தை, முழுமையாக பாவமற்றவர் எனும் அர்த்தமுள்ள சக்கிய்யா என்பதாகும்.

இறைவேதத்தில் ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மைக்கு பல ஆதாரங்கள் உள்ளன கீழ்வரும் பந்திகள் அவற்றுள் சிலவாகும்:

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை (1பேதுரு 2:22).

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்       2கொரிந்தியர் 5:21

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள் அவரிடத்தில் பாவமில்லை   1யோவான் 3:5.

ஆகவே குர்ஆனிலும் இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ் மாத்திரமே பாவமற்றவராக குறிப்பிடப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவ்விரு புத்தகங்களிலும் அவர் நிச்சயத்துடன் அவ்விதம் விபரிக்கப்படுகின்றார். வேறெந்த நபியோ, மனிதனோ அவ்விதம் விபரிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் இரு நூல்களும் ஏனைய நபிமார்களின் பாவங்களை விபரிப்பதுடன், ஈஸா அல் மஸீஹ் மாத்திரமே பாவமற்றவராக இருந்தார் என்பதையும் உறுதியாகக் கூறுகின்றன. (குர்ஆனில் சூறா 19:19இல், ஈஸாவின் தனித்துவம் வாய்ந்த பிறப்பானது, மலக்கு மரியாளின் மகனது குற்றமற்ற தன்மையை விபரிப்பதாய் உள்ளது. இது ஓர் மனிதன் கன்னியினிடத்தில் பிறந்தாலன்றி, குற்றமற்றவனாய் இருக்கமுடியாது என்பதை காண்பிக்கின்றது. எவ்வாறாயினும் ஈஸா அல் மஸீஹ்வே இவ்விதம் பிறந்த ஒரே மனிதனாகவும், இதுவரை வாழ்ந்தவர்களில் பாவமற்றவராக வாழ்ந்த ஒரே நபருமாவார். (அது கட்டாயமானதாகவும் இருந்தது.) எந்த ஒரு நபியும் பாவம் செய்ய மாட்டார்கள், பாவம் செய்யவில்லை என்பதை குர்ஆன் மறுக்கின்றது. பின்வரும் நபிமார்களின் பாவ தன்மையினை காண்பிக்கின்றது குர்ஆன்:

1.         ஆதம்”(அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; ”உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள்எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் என்று கூறினார்கள்.                 சூறா 7:22-23.

2.         இப்ராஹீம், நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.”                                                            சூறா 26:82

3.         மூஸா, ”என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”.                                            சூறா 28:16

4.         யூனுஸ், ஆகவேஇ (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.”                               சூறா 37:142

5.         முகம்மது, ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக”                   சூறா 47:19

ஈஸா அல் மஸீஹ் பாவமன்னிப்பிற்காக தௌபாச் செய்யுமாறு ஒருபோதும் கட்டளையிடப்படவில்லை. ஏனெனில் அவர் பாவமற்றவராக இருந்தார். குர்ஆன் ஏனைய நபிமார்களின் தவறுகளை சுட்டிக்காண்பிப்பது போல, ஈஸா அல் மஸீஹ் தம் தவறுகளுக்காகவோ, குற்றங்களுக்காகவோ, பாவங்களுக்காகவோ துஆச் செய்வதை ஒருபோதும் காண முடியாது. அவர் ஒருபோதும் தம் ஆன்மாவுக்கு தவறிழைக்கவுமில்லை, குற்றப்படுத்தப் படவுமில்லை. குர்ஆனும் அவர் முழுவதும் பாவமற்றவராகவும் குற்றமற்றவராகவும் இருந்தார் என வலியுறுத்துகின்றது. அதனால் நாம் அனைத்து மனிதர்களிலும் ஈஸா அல் மஸீஹ் மட்டுமே பாவமற்றவராக இருந்தார் என குர்ஆன் போதிக்கின்றது எனும் முடிவுக்கு வரலாம்.

இறைவேதத்தில் உலகளாவிய பாவத்தின் விளைவு அடிக்கடி கூறப்பட்டுள்ளது. ஆயினும் அக்கருத்தினை நிரூபிப்பதற்கு இவ் வசனம் போதுமானது

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை            (ரோமர் 3:10-12).


இறைவேதம், ஈஸா அல் மஸீஹ்வை தவிர எந்தவொரு மனிதனும் இறைவனுக்கு உண்மையாகவும் தன் வாழ்நாள் முழுவதிலும் நன்மையே செய்தவராகவும் இருக்கவில்லை என போதிக்கின்றது. ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடமிருந்து பின்வாங்கி அவருக்கு விரோதமாகப் பாவம் செய்துள்ளனர்.


மீண்டுமாக, ஈஸா அல் மஸீஹ் மட்டுமே பாவம்-அற்றவர் என்பதை நாம் காண்கின்றோம். எனவே குர்ஆனும் இறைவேதமும் ஈஸா அல் மஸீஹ்வின் கன்னி-பிறப்பை போதிக்கின்றன, அதனால் அவ்விரண்டும் அவர் மாத்திரமே பாவமற்றவர் எனவும் போதிக்கின்றன.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?