நாம் ஏன் புனித வேதாகமத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும் 6


விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்: 6

புனித வேதாகமம் (6)

(நாம் ஏன் புனித வேதாகமத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும்?)


புனித வேதாகமத்தின்; தீர்;க்கதரிசனங்களில் நாம் மூன்று காரியங்களை கண்டடைகின்றோம்:

1    இஸ்றாயீலின் சரித்திரமும் அவர;களை சுற்றிலுமிருந்த இனங்களும்.

2    மஸீஹ்வின் ஜீவியம்.

3    இறுதி காலமும், நிறைவேறப்பட்ட சில தீர;க்கதரிசன உதாரணங்களும்.

காலம் போதாதபடியால் நாங்கள் அல்-மஸீஹ்வின் ஜீவியத்தைக் குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப் பட்டிருக்கின்ற சில தீர;க்கதரிசனங்களை மாத்திரமே இங்கு பார்;க்கபோகின்றோம். மத்தேயு நற்செய்தி நூலில் மாத்திரம் மஸீஹ்வை பற்றிய தீர;க்கதரிசனங்கள் நிறைவேறியது பற்றி குறைந்தபட்சம் 21வசனங்கள் இருக்கின்றது.

வாசியுங்கள்- யோவான் 5:39.

“இறைவார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கிறீர்கள், ஏனெனில் அவைகளில் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே.

இப்பொழுது நாம் இந்த தீர;க்கதரிசனங்களில் சிலவற்றையும் அதன் நிறைவேறுதல்களில் சிலவற்றையும் வாசிப்போம்.

(கி.மு. கிறிஸ்துவுக்கு முந்திய வருடங்கள்)


கி.மு 700: மஸீஹ்வின் பிறப்பிடமும் வாழ்விடமும்: மீகா 5:2

·        நிறைவேறுதல் - லூக்கா 2:4-7

கி.மு 700: அவரின் கன்னிப்பிறப்பு: ஏசாயா 7:14

·        நிறைவேறுதல் - மத்தேயு 1:18-23

கி.மு 700: அவரின் இறைத்தன்மை: ஏசாயா 9:6

·             நிறைவேறுதல் - மத்தேயு 1:23

கி.மு 500: அவருடைய வருகையின் காலம்: தானியேல் 9:24

·             நிறைவேறுதல் - கலாத்தியர; 4:4

கி.மு 700: அவர; இரட்சிக்கவும், சுகமளிக்கவும் வருவார;: ஏசாயா 53:3-6

·        நிறைவேறுதல் - மத்தேயு 1:21; லூக்கா 18:40-43; 8:41-45;   மத்தேயு 4:23-24; 11:2-6; 8:16-17

கி.மு 700: மஸீஹ் எனும் நாமம்: ஏசாயா 49:1-8

·        நிறைவேறுதல் - மத்தேயு 1:21 (குறிப்பு - எபிரேய மொழியில் 'யோசுவா என்றால் 'இரட்சிப்பு என்று பொருள்.)

கி.மு 480: ஒரு கழுதையின் மேல் ஏறி பைத்துல் முகத்தஸ்ஸூக்குள் பிரவேசித்தல்: சகரியா 9:9

·        நிறைவேறுதல் - மத்தேயு 21:1-9

கி.மு 480: ஈசாவை காட்டிக்கொடுத்தல்: சங்கீதம் 41:9

·        நிறைவேறுதல் - சகரியா 11:12-13; மாற்கு 14:10-21; 43-46; மத்தேயு 27:3,8

கி.மு 700: சிலுவையில் ஈசாவின் மரணம்: ஏசாயா 53; சங்கீதம் 22:1

·        நிறைவேறுதல் - மத்தேயு 27:33-50

கி.மு 700: ஈசாவின் மரணம் ஏசாயா 53:9

·        நிறைவேறுதல் - மத்தேயு 27:6
கி.மு 900: ஈசாவின் உயிர;த்தெழுதல்: சங்கீதம் 16:8-11

·        நிறைவேறுதல் - அப்போஸ்தலர; 2:25-32

கி.மு 900: ஈசாவின் பரமேறுதல்: சங்கீதம் 110:1

·        நிறைவேறுதல் - அப்போஸ்தலர; 1:6-11; எபிரெயர; 1:13

இந்த தீர;க்கதரிசனங்களின் நிறைவேறுதலை விபரிப்பதில் குறிப்பிடப்படும் உலக ரீதியான ஆதாரங்கள் எவ்விதத்திலும் முரன்படுவதில்லை. அனைத்து சமய புத்தகங்களிலும் இது ஒரு தனித்துவம் வாய்ந்ததாய் இருக்கின்றது. இறைவனுடைய செய்தியை மனித இனத்திற்கு அருளுவதில் இறைவன் உலக சரித்திரத்தை பயன்படுத்தியமை இறைவனுடைய ஒரு ஸ்தீரமான முத்திரையிடப்பட்ட காரியமாய் இருக்கின்றது. எனவே உண்மையாகவும் நேர;மையாகவும் இறைவனைத் தேடுகின்ற எவரும் வேதாகமம் இறைவனுடைய வார;த்தை என்பதை உறுதிப்படுத்தி;கொள்வார்;கள்.

இந்த புனித கிதாபானது> சில சமய வாதிகள் மற்றவர;கள் மேல் தங்களுடைய கருத்துக்களை திணிக்கச்செய்த ஒரு புத்தகமல்ல. மேலே கொடுக்கப்பட்டிருக்கின்ற ஆதாரங்களை தெளிவுற அறிந்த பின்னும் இறைவேதம் கெடுக்கப்பட்டிருக் கின்றது என்று சொல்ல எவரும் துணிவதில்லை. எனினும் புதிய ஏற்பாட்டில் சில காரியங்கள் நடந்ததிற்குப்பிறகு அவைகளை தீர;க்கதரிசனத்தின் நிறைவேறுதல்கள் என்று நிரூபிப்பதற்காக, அவைகளைக் குறித்த தீர;க்கதரிசனம் என்ற பகுதிகள் பிற்காலத்தில் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டதா? என்று சிலர்; கேள்வி எழுப்ப முடியும். பல காரணங்களின் நிமித்தம் இந்த கேள்வியானது ஒரு சிந்தனையற்ற கேள்வி என்று நாம் கூற முடியும்.

ஏனென்றால், யூதர்கள் தங்களுடைய வேத வாக்கியங்களை தங்களுடைய முழு சக்தியையும் பிரயோகித்து உயரிய ரீதியில் காப்பாற்றி வந்தார்;கள். அவர்கள் தங்களுடைய விசுவாசத்திற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இந்த தீர்க்கதரிசனங்கள் தங்களுக்கு ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது என்று எண்ணி, இந்த தீர்க்கதரிசனங்கள் தங்களுடைய பரிசுத்த புத்தகத்தில் இருப்பதைக் குறித்து அவ்வளவாய் ஆர்வம் கொள்ளவில்லை. மேலும் பழைய ஏற்பாடானது ஈஸா அல் மஸீஹ்வுக்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே எழுத்தில் எழுதப்பட்டடு, பல இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் இருந்தது. கி.மு 2ம் நூற்றாண்டிலேயே பழைய ஏற்பாடு கிரேக்க மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. எனவே அவைகளில் மேற்கண்ட விதமாக காரியங்களை செய்வதென்பது கொஞ்சமும் சாத்தியமில்லை.



பரீட்சை. 6

1.    புனித வேதாகமத்தின் வசனங்கள் யாரைக் குறித்து சாட்சி பகிர;கின்றது?
2.    ஏன் ஈஸா மஸீஹ்க்கு பின்பு பழைய ஏற்பாடு எழுதப்படவில்லை என்பதற்கு இரண்டு காரணங்களைத் தருக.

Comments

  1. சிந்திக்க வைக்கும் நல்லதொரு ஆக்கம். மிக்க நன்றி சகோதரரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?