விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம் : 9

மனிதன்

(இறைவன் மனிதனை குறித்து என்ன கூறுகின்றான்?)


இப்பொழுது இறைவன் மனிதனைக் குறித்து என்ன கூறுகின்றான் என்று .
பார்ப்போம்

மற்றவைகள் எல்லாம் பிழைத்துவிட்டாலும், உருவாக்கியவர்களின் அறிவுறுத்தல்களை வாசியுங்கள்

 இது மிகவும் பிரசித்தியான ஒரு அடுப்பு உற்பத்தியாளியின் பாவனை அறிவுறுத்தல் புத்தகத்திலிருந்த ஒரு வாக்கியமாகும். நாம் எம்மைச் சுற்றிலும் பார்க்கும்போது, புறக்கணிப்பும், யுத்தமும், துன்பமும் அநியாயமுமே இவ்வுலகம் முழுவதிலும் பரவி கிடக்கின்றது. அவை எம்மை விரக்திக்கே இட்டுச் செல்லுகின்றது. ஏன் ஒவ்வொரு மனிதரும் மற்றவா்களை நேசிப்பதற்கு பதிலாக சுயநலத்தினாலேயே செயல்ப்படுத்தப்படுகின்றனா்? ஏன் ஒவ்வொரு மனிதரிலும் சுயநலம்  மலிந்து காணப்படுகின்றது? நம்மை உருவாக்கிய இறைவன் நம்மைக்குறித்து கூறுபவற்றை நாம் வாசிக்க ஆரம்பித்தால் மாத்திரமேநாம் எம்மைக் குறித்து சரியாகப்புரிந்துகொள்ள ஆரம்பிப்போம். மனிதனைக் குறித்த இறைவனின் திட்டம் என்னவென்பதையும், இன்றும் அதிக கவலை கண்ணீர்களுக்கூடாக மனிதன் செல்ல காரணம் என்னவென்பதையும்  அறிந்துக்கொள்ள ஆரம்பிப்போம். ஆயினும், அதே நேரத்தில் இந்த துக்ககரமான நிலையை திருத்தியமைக்க அல்லது சாரிப்படுத்திக் கொள்வதற்கான இறைவனின் வழிகளையும் கண்டு பிடிப்போம்.

மனிதனைக் குறித்த இறைவனின் சித்தம்

இறைவேதத்தப்போல, குர்ஆன் உம் மனிதனின் சிருஷ்டிப்பைக் குறித்து பேசுகின்றது
உதாரணமாக,
 ‘ஓசை தரக்கூடிய கறுப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்’             (சூறா 15:26).
அல்லது,
‘(யாவற்றையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.’        (சூறா 96:1-2).

அதையும் கடந்து சென்று மனிதனைக் குறித்த மிக தெளிவான நோக்கத்தை புனித வேதாகமம் வெளிப்படுத்துகின்றது. ஒரு திட்டமில்லாமல் இறைவன் மனிதனை உருவாக்கவில்லை. இந்த முழு பிரபஞ்சமும் அதன் அமைப்பும் இதற்கு சாட்சி பகிர்கின்றது. ஒரு பொருளை நாம் எடுத்துக்கொண்டால், அதன் மெய்யான நோக்கம், அதன் மெய்யான அர்த்தம் என்பவற்றை அதன் வடிவமைப்பாளரால்தான் விஸ்தரிக்கமுடியும். மனிதனைப் பற்றிய விடயத்தில் மனிதனைப் படைத்த கடவுளுக்குத்தான் அவனைக் குறித்த மெய்யான நோக்கத்தையும், அர்த்தத்ததையும் தந்திட முடியும். இறைவன் மனிதனை தன்னுடைய விசேஷத்த அன்பின் குறிக்கோலுக்காகவே சிருஷ்டித்தான்.       ஆதியாகமம்     1:26-28வரை வாசியுங்கள்.
இங்கு புனித இறைவேதம் இறைவன் மனிதனையும், மனுஷியையும் தனது சாயலாக படைத்தான் எனும்போது அதன் அர்த்தம் இறைவன் மனித இனத்தைப்போல் இருக்கின்றான் என்பதல்ல, காரணம் இறைவன் ரூஹ் ஆக  (ஆவியாக) இருக்கின்றான் என்று புனித இறைவேதம் மிகவும் தெளிவாகக் கூறுகின்றது (யோவான் 4:24). இங்கு சாயல் என்பது சரீரப்பிரகாரமாய் எதையும் குறிப்பிடவில்லை. ஆதமாகிய ஆணையும், அவ்வா ஆகிய பெண்ணையும் இறைவன் விசேஷித்த ஒரு விதத்திலேயே சிருஷ்டித்தான் (ஆதியாகமம் 2:7, 20-25). அவா்கள் இருவரும் இறைவனின் மெய்யான அறிவு, ஞானம் (கொலொசெயா; 3:9-10), பரிசுத்தம், நீதி (எபேசியா; 4:22-25) எனும் சாயலிலேயே படைக்கப்பட்டனர்.
கீழ்ப்படிவு எதிர்ப்பார்க்கப்பட்டது

அவா்கள் இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தபோது, இறைவனின் சாயல் அவா்களில் காணப்பட்டது. உண்மையுள்ளவா்களாயும், பூமியை நிரப்பு கின்றவா்களாயும், பலுகிப் பெருகி, பூமியை ஆட்சி புரிகின்றவா்களாகவும் இருக்கும்படி இறைவனால் அவா்களுக்கு கட்டளையிடப்பட்டது (ஆதியாகமம் 1:28; சங்கீதம் 8:5-8). இடப்பட்ட கட்டளைகள் அனைத்திலும் ஒரு காரியம் இருந்தது. அது செய்யக்கூடாது என்று தடைசெய்யும் காரியமாய் இருந்தது.       ஆதியாகமம் 2:15-17 வரை வாசியுங்கள்.

இங்கு எது தடை செய்யப்பட்டிருந்தது?

இந்த கடைசிக் கட்டளைக்கூடாக மனிதனின் கீழ்ப்படிவு பரீட்சை செய்யப்பட்டது.

அவர்கள் அந்த கட்டளைக்கான காரணத்தை அறிந்திருந்தப்படியால் அல்ல, இறைவன் அவா்களுக்கு அந்த கட்டளையை வழங்கியிருந்தபடியால் அவா்கள் அதற்கு கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஆதமும், ஹவ்வாவும் தாங்கள் செய்யும் எந்தக் காரியத்திலும் இறைவனின் சாயலை பிரதிபலிக்க வேண்டியவா்களாகவே இருந்தனா். அவா்கள் அவா்களுக்கு வேண்டிய பிரகாரம் ஜீவிக்க அல்ல, தாங்கள் செய்யும் அனைத்திலும் இறைவனுக்குக் கீழ்ப்படியவே எதிர்ப்பார்க்கப்பட்டனா். மனிதன் இறைவனுக்கு அன்பினாலும், கீழப்படிவோடும் மாறுத்தரமளித்தபோது, அவன் ஒரு தூய மகிழ்ச்சியை அனுபவித்தான். ஆனால், துரதிஷ்டவசமாக, ஒரு வேதனையான காரியம் நடைபெற்றது. அது இன்றைக்கும்கூட தொடா்ந்து மனித வாழ்வின் மகிழ்ச்சியை அழித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

மனிதனின் கீழ்ப்படியாமை
வாசியுங்கள் ஆதியாகமம் 3:1-24
இங்கு ஆதமும் அவ்வாவும் இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனார்கள்.

நன்மை, தீமை அறிந்து அவா்கள் இறைவனைப்போல் இருக்க விரும்பினார்கள்.

இறைவனுக்கும் அவா்களுக்கும் இடையில் இருந்த உறவு முறிந்தது (வாக்கியம் 8).

ஆதம் தான் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை(வாக்கியம் 12).

அவ்வா தான் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை? (வாக்கியம் 13).

இந்த குறிப்பிட்ட வேதனையான நாளில் ஆதம், அவ்வா எனும் முதல் மனிதர்களின் கீழ்ப்படியாமையின் நிமித்தம் பாவம் உலகத்தில் பிரவேசித்தது. அதினால் இறைவனின் முழு சிருஷ்டிப்பும் பாதிக்கப்பட்டது?

பாவம் எப்பொழுதும் பிரிவைக் கொண்டு வருகின்றது:

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பிரிவு (வாக்கியம் 8)

மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் பிரிவு (வாக்கியம் 7,12)

மனிதனுக்கும், சிருஷ்டிப்புக்கும் இடையில் பிரிவு (வாக்கியம் 14-19)

மனிதனுக்கும், அவன் செய்யும் தொழிலுக்கும் இடையில் பிரிவு (வாக்கியம் 17,19)
அந்த நாளிலிருந்து சகல மனித இனமும் பாவத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆதமுக்கும், அவ்வாவுக்கும் பிறந்த முதல் மகன் ஒரு தனித்துவமான கொலைகாரனாக மாறினான் (ஆதியாகமம் 4:1-16). அவனும், அவனுடைய சந்ததியான அனைத்து மனித சந்ததியும் பாவ சுபாவத்தை அவனுடைய பெற்றோர்களாகிய ஆதம், அவ்வாவிடமிருந்து சுதந்தரித்துக் கொண்டனா். இதைக் குறித்து நீங்கள் உங்களுக்கே சாட்சி கூறிட முடியும். பாவத்திற்கு உங்களை உந்தும் பாவ சுபாவம் உங்களில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நன்மைச் செய்வது உங்களுக்கு கடினமான ஒன்றாகவே இருக்கின்றது. கிறிஸ்தவ உபதேசம் இதை ஜென்ம பாவம் என்று அழைக்கின்றது. இதை குர்ஆன் சூறா 12:53ம் வாக்கியத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கலகம் பண்ணும் இளைஞர்களைப்போல, மனிதனும் எந்த காலத்திலும் இறைவனிடமிருந்து பிரிந்து சுயாதீனமாய் வாழ்வதையே தெரிந்துக்கொள்கின்றான். அவன் தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே இறைவனின் அன்பை சந்தேகிக்கின்றான். இறைவன் விரும்பும் இருபக்க பரிமாறுதலுள்ள அன்பைவிட்டு வெளியில் செல்லவே எப்பொழுதும் அவன் விரும்புகின்றான். அவன் இறைவனிடமிருந்து தனது உறவை முறித்துக் கொண்டப்படியால், அவனுடைய சகலநற்குணங்களும்அன்றிலிருந்து இன்றுவரை சுயத்தை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றது. இது இறைவனுக்கு எதிரான அவனுடைய மறைமுக எதிர்ப்பாகும்! இந்த துன்யாவின் தரத்திற்கு ஏற்ப அவன் ஒருநல்வாழ்வுக்கு தன்னை இட்டுச் செல்ல போராட முடியும், ஆனால் அவன் தனது பாவங்களிலிருந்து தௌபாச்செய்து இறைவனண்டைக்கு வராமல், இறைவனின் பாவ மன்னிப்பை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது. சிலா் இறுதி காலத்தில் இறைவனின் இராஜ்ஜியத்தில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து, மதங்கள் மூலம் செய்யப்படும் நற்கருமங்களுக்கூடாக இறைவனுக்கு லஞ்சம் கொடுத்து, அந்த இடத்தை சம்பாதிக்கலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனா். இந்த காரியமானது இறைவனின் தூய்மை என்பது முழுமையான பரிபூரணத்தைக் கோருகின்றது என்பதை அறியாமல், இறைவனின் கிருபையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துச் செய்யும் வெறும் ஒரு முயற்சியே ஆகும்.

ஆதியாகமம் 6:5-6; சங்கீதம் 14:1-3; ரோமா; 3:10-18; 1:29-32; கலாத்தியா; 5:19-21. வாக்கியங்களில் இறைவன் மனிதனைப்பற்றி என்ன கூறுகின்றான் எனறு வாசித்து அறியுங்கள்.


மனிதனுக்கு இறைவனின் அன்பும் இரக்கமும்

மனிதன் செய்த காரியத்தினிமித்தம் வெறுப்படைந்து இறைவன் மனிதனை கைவிடவில்லை என்ற உண்மையை கண்டறிவது ஒரு ஆச்சரியமான காரிய மாகும். மனிதன் தனது கீழ்ப்படியாமை, முரட்டாட்டம் என்பவைகளில் திக்கற்றவனாய் அலையும்படி இறைவன் மனிதனை விட்டுவிடவில்லை. இறைவனின் அன்பு நம்முடைய அன்பிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது. இறைவன் அன்பாய் இருக்கின்றபடியால் (1யோவான் 4:8,16), அவனுடைய அன்பு நிபந்தனையற்றது. இறைவன் அவனுக்கே உண்மையுள்ளவனாய் இருக்கின்றான். அவன் இன்னும் தனக்கு சத்துருக்களாய் இருப்பவா்களைக்கூட நேசிக்கின்றான் (ரோமா; 5:6-10). இறைவன் தனது நித்திய அன்பினால் கீழ்ப்படிமையான மனிதனை தேடுகின்றான் (ஆதியாகமம் 3:9). அவன் திரும்ப, திரும்ப மனம் திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் குறித்து பேசுகின்றான் (எரேமியா 3:12-13, 19-20; ஏசாயா 1:18; மத்தேயு 11:28). தன்னோடு ஒரு விசேஷ உடன்படிக்கை உறவுக்கு இறைவன் மனிதனை அழைக்கின்றான். (ஆதியாகமம் 17:7; லேவியராகமம் 26:12; யாத்திராகமம் 29:45; 2கொரிந்தியா; 6:16; வெளிப்படுத்தல் 21:3-7; எபிரேயா் 8:10; எரேமியா 7:23; 11:4). இறைவன் தன்னுடைய பாவமன்னிப்பு, நியாயத்தீh;ப்பு என்பவைகளை நிறைவேற்ற உண்மையுள்ளவனாய் இருக்கின்றான்.

2தீமோத்தேயு 2:13 வாசியுங்கள்.

நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார். ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.

மனிதனின் கீழ்ப்படியாமையின் நிமித்தம் இறைவனின் அன்பு ஒருபோதும் மாறவில்லை. நாம் புனித இறைவேதத்தில் வாசிக்கும் வண்ணம் இறைவன் எப்பொழுதும் மன்னிக்க ஆயத்தமாகவே இருக்கின்றான். ஆயினும், அவன் தூய்மையும் நீதியுமுள்ளவன். பாவம் தண்டிக்கப்படவேண்டும். ஆகையால்தான், ரோமா; 3:21-26ல் நாம் பார்க்கப் போகின்ற வண்ணம் இறைவன் பாவ மன்னிப்பையும், அதன் நிச்சியத்தையும் எமக்கு அருளுவதற்கு ஒரு புது வழியை ஆயத்தப்படுத்தினான்.


பரீட்சை:  9
 பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
1.            இங்கு மனிதன் (ஆதாம், ஹவ்வா) இருவரும் யாரின் சாயலில் படைக்கப்பட்டனா்? (வாக்கியம் 27).
 
  
2.            இது வெறுமனே ஆணை குறித்து மாத்திரமா கூறப்படுகின்றது? (வாக்கியம் 27)
3.            ஆதியாகமம் 1:28ம் வாக்கியத்திலுள்ள் மூன்று கட்டளைகளுக்கு பெயரிடுங்கள்.
4.            இறைவன் எவ்வாறு தன்னை வெளிப்படுத்து கின்றான் எனும் ஐந்து வழிகளை பெயரிடுங்கள்.
5.            யாருடைய சாயலில் மனிதன் படைக்கப்பட்டான்?
6.            இறைவனுடைய கட்டளைக்கு எவ்விதம் மாறுத்தரவு அளிக்கும்படி   ஆதம்      எதிர்ப்பார்க்கப்பட்டார்?
               
7.            கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்: பாவம் யார் யாருக்கு இடையில் பிரிவிணையைக் கொண்டு வந்தது?  

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?