இயேசுவின் தனித்துவத்திற்கான காரணங்கள் (ஆ)

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 8

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

5. இயேசுவின் தனித்துவத்திற்கான காரணங்கள் (ஆ)

ஈஸா அல் மஸீஹ்வின் பரமேறுதல்

மற்ற மனிதர்கள் இயற்கையாக செய்வது போல ஈஸா அல் மஸீஹ்வும் மண்ணுக்கு திரும்பியிருப்பாரானால் எந்த கிறிஸ்தவனும் அவர்தான் இறை குமாரன் என விசுவாசித்திருக்க மாட்டான். குமாரனும் உண்மையில் பரத்தில் அவரது வாசஸ்தலம் இருக்கிறது. ஆகையால் அவர் மனிதனாய் வந்தபடியால் அவர் மற்றைய மனிதர்களைப் போல இயற்கையாக மண்ணுக்கு திரும்புவதுபோல அவர் மண்ணுக்குப் போக முடியாது. மாறாக அவர் இறுதியில் பரத்திற்குத் திரும்ப வேண்டும். ஈஸா இறை குமாரனானால் அவரது பரமேறுதல் அத்தியாவசியமானதும் இந்த கருத்தை வலுபடுத்த (உறுதிப்படுத்த) தேவையான அடிப்படை அம்சமுமாகும்.

ஒருவருடைய சித்தப்படி, ஈஸாவின் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட வாழ்க்கை முறையானது அவர் இறை குமாரன் என்பதை ஈமான் கொள்வதற்கு உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, அவரது வாழ்வின் அனைத்து அம்சங்களுமே அவர் இறை குமாரன் என்ற உண்மையை மெய்ப்பிக்கின்றதாக நாம் காண்கின்றோம். ஆனால் நிச்சயமாகவே ஈஸாவின் காணப்படுகின்ற அனைத்து தனித்துவமான தன்மையும் இவ் உண்மை தெளிவாக்கப்படுகின்றது - இவை அத்தியாவசியமானது இறைவனுடைய குமாரனால் மாத்திரமே!.

எமது சிந்தையின் உணர்வானது இவர் உண்மையில் இறைவனுடைய குமாரன் என்பதற்கு தேவையான, இவ்வாறான தனித்துவமான தன்மைகள் அவர்கள் குறிப்பிட்டு காண்பிக்கின்ற மனிதனுக்கு தனித்துவமாக கொண்டிருக்க வேண்டும் என்பதையும், இத்தனித்துவம் அத்தியாவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது - ஆகவே அவர் இறைவனுடைய குமாரன்.

குர்ஆன் இறைவனுடைய மகிமையை எனது குறுகிய சிந்தனைக்கு தெரியப்படுத்துவதுடன், அதற்கான சில விளக்கங்களையும் தருவதுடன் இறைவன் வீற்றிருக்கும் சிங்காசனத்தைப் பற்றியும் கூறுகின்றது (சூறா 10:4, 7:54, 13:2, போன்றன). இவ் உருவக மொழியானது இந்த பூமியானது சந்தோஷமடைகின்ற இறைவனுடைய சர்வ ஆளுகையை குறித்து விழிப்படையச் செய்கின்றது. இறைவேதம் இதே விடயத்தை கூறுகின்றது. ஆனால் பரலோகத்தில் ஈஸாவின் நிலை குறித்ததான திடகாத்திரமான விளக்கத்தை தருவதுடன் அவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்பதையும் கூறிநிற்கின்றது.

அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:56).

இறைவன் தம்முடைய பெரிதான வல்லமையை, மஸீஹ்வை மரித்தோரிலிருந்து எழுப்பி, உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்ததன் மூலம் மஸீஹ்வில் நிறைவேற்றினார்.                      (எபேசியர் 1:20)

மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்ன வெனில். பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு  (       எபிரேயர் 8:1).

இது --- எடுக்கப்படவில்லை. மாறாக, இறைவனுடைய சிங்காசனத்தை குறித்து குர்ஆன் கூறுவதிலிருந்து கலப்படமின்றி எடுத்துக்காட்டப்படுகின்றது. குர்ஆனிலும் இறைவேதத்திலும் வெளிப்பாடுகள் உலகத்தின் மீதுள்ள இறை அதிகாரத்தை காண்பிக்கின்றது. மற்றும் இறைவேதம் சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் உள்ள ஈஸாவைக் குறித்து கூறுவதானது இறை அர்ஷில் பிதாவாகிய இறைவனோடு மகிழ்ந்திருக்கிற உறவையும் (நிலையையும்) வெளிப்படுத்துகின்றது.

இறைவேத காலத்தில் பெரும்பாலான இராஜ்ஜியங்களில் ஒவ்வொரு நபரும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜாவுக்கு முன்பாக தாழ பணிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவனது குமாரன் மாத்திரம் அதற்கு விதிவிலக்கு. ராஜாவின் மனைவி, மகள்மார், பிரபுக்கள், இளவரசர்கள், அதிகாரிகள் மற்றும் அனைத்தும் அவருக்கு முன்பாகப் பணிந்து அவரது கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இராஜாவின் குமாரன் அவ்வாறு அல்ல - அவன் சிங்காசனத்தில் வலது பாரிசத்தில் உட்கார்ந்து இருப்பார் அல்லது எழுந்து நிற்பார். இதற்கான காரணம் வெளிப்படையானது - அவன்தான் சிங்காசனத்திற்கான சுதந்தரவாளி. தகப்பனுடைய சிங்காசனம் அவனுக்கு உரியதே. எனவேதான் வேதாகமம் ஈஸா அல் மஸீஹ் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதாகவும் சிலநேரங்களில் அவரது சிங்காசனம் எனவும் கூறுகின்றது (எபி. 1:8, வெளி. 3:21). அந்த காலங்களில் தகப்பனாகிய ராஜாவின் குமாரன் இருந்ததுபோல, ஈஸாவும் பரலோகத்தில் இருக்கிற தனது தந்தைக்கும் இருந்தார். அவர் இறைவனுடைய சொந்த மகிமையில் இருக்கும்படி பரமேறினார் (நாம் குர்ஆனிலும் இறைவேதத்திலும் பார்த்திருக்கிறது போல) காரணம் அவர் தேவ குமாரன். குர்ஆன் இறைவனுடைய சிங்காசனத்தைக் குறித்து பேசுகிறது. சிங்காசனத்தில் வீற்றிருப்பவரது வலது பாரிசமே பரலோகத்தில் ஈஸா அல் மஸீஹ்வுக்குரிய சரியான இடமாகும்.

இரண்டாம்வருகை

இறை குமாரனால் மாத்திரமே இறைவனுடைய நியாயத்தீர்ப்பை கொண்டுவர முடியும்? இது மட்டுமே இரண்டாம் வருகையை விளங்கப்படுத்துகின்றது. இறை குமாரனும் மனிதனாக வந்து, இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்கான வெளிப்படையான மத்தியஸ்தரானார். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது இறைவனை மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார். குர்ஆன் இறைவனுடைய சித்தத்தையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்த வந்ததாக கூறுகின்றது. ஈஸா இறைவனை இறைவனாகவே மனிதர்களுக்கு வெளிப்படுத்த உருவெடுத்தார். பின்வரும் வசனங்கள் இதை தெளிவாக்குகின்றது:

“சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்   (மத்தேயு 11:27).

என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்                                          யோவான் 12:45).

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் (யோவான் 14:9).

இரண்டாவதாக, அவர் மனிதர்கள் முகமுகமாய் இறைவனை தரிசிக்கும்படி செய்தார். இது பொருந்துகிறது. ஆகையால் மனிதனாயிருந்த இறை குமாரன் இறைவனுடைய நியாத்தீர்ப்பிற்காக மத்தியஸ்தராக இறுதியில் வெளிப்படுவார்:

ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனா யிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்          (யோவான் 5:26-27).

இது மட்டுமே அவரது இரண்டாம் வருகையை விளங்கப்படுத்துகிறது. அதற்கான காரணத்தை தருவதோடு, அதை அவசியமாக்குகிறது. இறை குமாரனானபடியால் இரண்டாம் வருகையானது ஈஸாவின் தனித்துவத்தோடு இணைந்து செல்கின்றது. இறைவனை மனிதர்களுக்கு வெளிப்படுத்தி, மனிதனாய் உருவெடுத்தவராகிய அவர் இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு பரலோத்தில் இருக்கின்ற அவரே அனைவரையும் நியாயந்தீர்ப்பதற்கு அழைக்கும்படி நியமிக்கப்பட்டவர்.

ஆகவே ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கையில் காணப்பட்ட எல்லா தனித்துவமான தன்மைகளும் அதனுடைய முக்கியத்துவத்தையும் ஈஸா இறை குமாரன் என்பதனையும் மெய்ப்பிக்கும் காரணிகளாக இருப்பதை நாம் காண்கிறோம். உண்மையில் பூரணமாக அனைத்து தன்மைகளும் இருப்பதானது அவர்தான் இறை குமாரன் என்கிற முடிவுக்கு வர உந்துகின்றது. அவைகளில் ஏதாவது ஒன்று குறைவுபடுமானால், கிறிஸ்தவ விசுவாசமானது பிழைத்துப் போகும். ஆனால் இறைவேதத்தில் காணப்படும் ஒவ்வொரு நெருக்கடியான சூழ்நிலையும் (சந்தர்ப்பமும்) அவர் இறை குமாரன் என்ற வியாக்கியானத்துக்கு உதவி செய்வதாகவே காணப்படுகின்றது.

எது கவனத்தை ஈர்க்கின்றது? எவ்வாறாயினும் குர்ஆன் எல்லாவித தனித்துவ தன்மையையும் ஏற்றுக்கொள்கிறதா? ஈஸா இறை மகன் என்பதை மறுக்கின்ற விடயத்திலேயே அதனை ஏற்றுக்கொள்கின்றது - உண்மையில் அவர் இறைவனுடைய குமாரன் என்பதை அமைதியாகவும் முழுமையாகவும் அது வெளிக்கொணர்கின்றது. ஏனெனில், குர்ஆன் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்வு பற்றி கொண்டுள்ள அம்சங்களில் அவர் இறைவனுடைய குமாரன் எனும் கொள்கைக்கு எதிராக முன்வைக்கக் கூடிய எவ்வித சான்றும் இல்லை. அது கொண்டுள்ள ஒவ்வொரு அம்சமும் அவரை இருக்கிறவண்ணமாகவே காண்பிக்கின்றது. ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய குமாரனாய் இருப்பதால், அவர் குர்ஆனிலும் இறைவேதத்திலும் தனித்துவமானவர் - எனும் ஒரே முடிவுக்கே நாம் வரலாம். அவர் துன்யாவில் ஒரு மனிதனாக வாழ்ந்தபோதும், அவரைப் பற்றிய அனைத்து விடயங்களும் இறுதியில் அவரை மனுஷீக மட்டத்தைப் பார்க்கிலும், அதைவிட கூடிய நிலையான தேவத்துவத்திற்கே இட்டுச் செல்கின்றது.


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?