இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி (Part 3)


//நெட்ட தேடி இஸ்லாம் பற்றி படித்தேன்// ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியையாக இருந்தேன். வாலிப கூட்டத்தில் ஊழியம் செய்தேன் என்று சொல்லும் லித்வின், கிறிஸ்தவம் கூறும் கணக்கொப்புவிப்பு என்பதை தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை என்பது இணையத்தளத்தில் இஸ்லாம் பற்றி தேடுவதை அவள் யாரிடமும் சொல்லவில்லை என்பதிலிருந்து காட்டுகிறது.
ஒருவன் ஒழுங்கான கிறிஸ்தவ வாழ்வை வாழவேண்டுமானால் அவனால் தனிமையாக வாழமுடியாது. நாள்தோறும் அவன் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து காரியங்களையும் தனது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொறுப்பாக இருக்கின்றவருக்கு ஒப்புவிக்கவேண்டும். பிழைகள் செய்திருந்தால் இருவருமாக சேர்ந்து இறைவனிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மன்னிப்பு கோரி மனந்திரும்பவேண்டும். நாள்தோறும் சந்திக்க முடியாதவர்கள் வாரம்தோறும் சந்திப்பார்கள். இந்த கிறிஸ்தவ அனுபவம் லித்வினின் வாழ்க்கையில் இருந்திருந்தால், அவள் நிச்சயமாக தான் இஸ்லாத்தை பற்றி ஆராய்வதைப்பற்றி கணக்கொப்புவித்திருப்பாள். அப்பொழுது அவளுக்கு இஸ்லாமியர் பைபிளுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில்களை கொடுத்த தளங்களை பார்வையிட வைத்து, சாகிர் நாயிக் எவ்வளவு தந்திரமாக பொய்களை சொல்லியுள்ளார் என்பதை புரியவைத்திருக்கலாம். அந்த சாகிர் நாயிக் சொல்லும் பொய்கள் இஸ்லாத்துக்கு முரணாகவுள்ளதை இன்று அநேக இஸ்லாமியர் அறிந்து அவருக்கு எதிராக எழுதிய கட்டுரைகளும், பேசிய வீடியோக்களும் இணையத்தளங்களில் உள்ளது அவற்றையும் இந்த லித்வின் பார்வையிட்டிருந்தால் இப்படி வழிதவறி போய் இருக்க மாட்டாள்.
 //கிறிஸ்தவம் பற்றிய அன்பு இஸ்லாம் தெரிந்துகொள்ள தடையாக இருந்தது// இதற்குதான் வீண் வைராக்கியம் என்பது. இவள் கிறஸ்தவ போதனைகளை சரியாக பின்பற்றவில்லை. அடிப்படை போதனைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவம் மீது வைராக்கியம் கொண்டிருந்தாள். எல்லா மதங்களிலும் இப்படியானவர்கள் இருக்கிறார்கள். மழைக்குக்கூட பள்ளிவாசலுக்குள் ஒதுங்காத இஸ்லாமியரிடம் இஸ்லாத்துக்கு எதிராக ஏதாவது பேசிப் பாருங்கள்! கையில் மட்டும் கத்தியிருந்தால் உங்கள் நிலைமை ஐயோ!
//யூடியுபில் சாகிர் நாயிக் வீடியோ பார்த்தேன்// தமிழ் நாட்டில் சாகிர் நாயிக்கைவிட பிரசித்தமானவர் பீ. ஜெயினுல்ஆபிதீன் போன்றவர்களின் கிறிஸ்தவத்துக்கு எதிரான இணையத்தளங்களே இருக்க இவர் நேரடியாக சாகிர் நாயிகின் வீடியோக்களை பார்வையிட்டாள் என்றால் அவளை வழி நடாத்தியவர்கள் பீஜே எதிர்ப்பாளர்களாக இருக்கவேண்டும் என்பது புரிகிறது. தற்பொழுது அவள் பின்பற்றும் இஸ்லாம் சாகிர் நாயிக் கொள்கை பிரச்சாரத்தில் உருவானதானால் அது முஹமது நபியை இறைவன் என்று சொன்ன இஸ்லாம். பீஜே இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்) இந்து மதம் சொல்லும் கல்கி அவதாரம் தான் முஹமது நபி என்பது சாகிர் நாயிக்கின் கொள்கை. அதாவது முஹமது நபி இறை அவதாரம்! இறைவன்! ஆனால் பீஜே இஸ்லாத்தின் கொள்கையின் அடிப்படையில் இது  இறைவனுக்கு இணையாக முஹம்மது நபியை உயர்த்தும் செயலாகும். ஆகவே ‘கிறிஸ்தவர்கள் “பிதா என்கிறார்கள். இயேசுவை தேவ குமாரன் என்கிறார்கள். இரண்டு கடவுள்களை பற்றி பேசுகிறார்கள்என்று திரியேக இறைவன் என்றால் என்ன என்ற விளக்கம் தெரியாமல் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியையாக இருந்த லித்வின் இப்பொழுது ஓர் இறை கோட்பாடு என்று நம்பி உண்மையிலேயே இரண்டு இறைவன்களை வழிப்படும் இஸ்லாத்தில் தன்னை இணைத்துள்ளார் என்ற துக்க செய்தியை சொல்லித்தான் ஆகவேண்டும்.

//குறிப்பாக யார் எல்லாம் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு ரிவட் ஆகி இருக்காங்களோ அவங்க வீடியோஸ் பார்த்தேன்// அந்த வீடியோக்களை பார்த்த லித்வின் அதற்கு மாற்றமாக இஸ்லாத்திலிருந்து ரிவட்டாகி சத்திய கிறிஸ்தவத்தை தழுவியவர்களின் வீடியோக்கள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்க்க மறந்துவிட்டாளே? இவள் உண்மையாகவே தீர விசாரித்து ஆராய்கின்ற ஒருவளாக இருந்திருந்தால் நிச்சயமாக அப்படித்தான் செய்திருப்பாள். இரண்டுவிதமான வீடியோக்களையும் ஒப்பிட்டு, எதில் மனமாற்றம் நடந்துள்ளது, எதில் மதமாற்றம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டிருப்பாள். ஒரே இரவில் இந்த திடீர் தீர்மானத்தை எடுத்திருக்கமாட்டாள். இணையத்தளத்தில் உள்ள எனது சாட்சியை (இயேசு கிறிஸ்துவை ஈமான்கொண்ட ஒரு தவ்ஹீத் மௌலவியின் ஷஹாதா) வாசித்திருந்தாலும் இவள் வழிதவறி சென்றிருக்கமாட்டாள். தனது அவசரப்புத்தியால் அழிவின் பாதையை தெரிந்தெடுத்திருக்கிறாள்.
//சாகிர் நாயிக் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பாரு அது கரெக்ட் என்று தோன்றும் ஆனா ஏத்துக்க மாட்டேன்// ஆம், வசனங்களை அடுக்கிக்கொண்டு போகும்போது அவர் முன்பின் முரணாக பல காரியங்களை சொன்னாலும் ஏன் குர்ஆனுக்கு முரணாக பலகாரியங்களை சொன்னாலும் அவை உண்மைபோல்தான் தெரியும். அவர் முன்வைக்கிற ஒவ்வொரு வாதங்களையும் ஒவ்வொன்றாக, நிதானமாக ஆராய்ந்தால்தான் அவர் 5நிமிடங்களில் எத்தனை பொய் சொல்கிறார் என்பதை ஆராயலாம். அப்படி ஆராய்ந்து ஆதாரத்துடன் காட்டிய அநேக வீடியோக்கள் யூடியுபில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு அந்த ஒரு இரவு போதாது. இஸ்லாமியரின் வஞ்சகத்தை அறிந்த கோயம்புத்தூரில் உள்ள யாராவது ஒரு கிறிஸ்தவரிடமாவது இதைப்பற்றி ஆலோசித்திருந்தால் இந்த நரகில் விழுந்திருப்பாளா லித்வின்?.
சாகிர் நாயிக் பைபிள் பொய் என்பதை நிரூபிக்க ஒரு கேள்வி கேட்பார். “சூரியன் இல்லாமல் ஒளிவருமா?இஸ்லாமியர் இல்லைஎன்பார்கள். பைபிள் அப்படித்தான் சொல்கிறது, இறைவன் ஒளியைப் படைத்த பிறகுதான் சூரியனைப் படைத்தானாம்என்று சிரிப்பார். இஸ்லாமியரும் வாய்விட்டு சிரிப்பார்கள்.
இந்த இஸ்லாமியர் குர்ஆனை நம்பாமல் சாகிர் நாயிக்கை நம்புவதால் இப்படி செய்கிறார்கள். குர்ஆன் சொல்கிற அல்லாஹ்வின் ஆற்றலை இவர்கள் அறிந்திருந்தால் சாகிர் நாயிக்கை கல்லெறிந்திருப்பார்கள். அல்லாஹ் ஒளியாயிருக்கிறான் என்று குர்ஆன் சொல்கிறது. அல்லாஹ் ஒளியாயிருக்க வேண்டுமானால் அவனுக்கு சூரியன் வேண்டும். ஆகவே அல்லாஹ்வைவிடவும் சூரியன் பெரியது என்று சாகிர் நாயிக் சொல்கிறார். இஸ்லாமிய மகா ஆய்வாளர் சாகிர் நாயிக் கருத்தை அன்றைய அரேபிய சிந்தனையுடன் ஒப்பிட்டு யாராவது ஒரு இஸ்லாமியனாவது ஆராய்ந்திருந்தால் அவன் நிச்சயமாக சாகிர் நாயிக்கை கல்லெறிந்து கொன்றிருப்பான்.
இப்பொழுது சாகிர் நாயிக் சொன்னதன் அர்த்தத்தை நான் சொல்லும் போது பல இஸ்லாமியர் வேதனைப்படுவீர்கள் என்பது எனக்கு புரியும். ஆனாலும் கிறிஸ்தவர்களுக்கு புரியவைப்பதற்காக அதனை சொல்லவேண்டியுள்ளது.
சாகிர் நாயிக் சொல்கிறார்
அல்லாஹ்வுக்கு ஒளிகொடுக்க சூரியன் வேண்டும். சூரியன் இல்லாமல் ஒளிகொடுக்க முடியாதுஇதனை அவருக்கு இருக்கும் விஞ்ஞான அறிவைக்கொண்டு சொல்கிறார். விஞ்ஞானத்தின் அடிப்படையில் சந்திரன் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றே பிரகாசிக்கிறது. அதாவது சந்திரன் ஒளிக்கொடுக்க வேண்டுமானால் சூரியன் வேண்டும். பண்டைய அரபியர்கள் சந்திரனை வணங்குகிறவர்களாகவும் பாரசீகர் சூரியனை வணங்குகிறவர்களாகவும் இருந்தார்கள் என்பது இஸ்லாமிய நாகரீகம் படித்த அனைவருக்கும் தெரியும். சந்திர கடவுளை அல்லாஹ் என்று அரபிகள் அழைத்தார்கள். அரபிகளின் சந்திர கடவுளான அல்லாஹ்வைவிடவும் பாரசீகரின் சூரிய கடவுள் பெரியவர் ஏனெனில் அல்லாஹ்வுக்கு ஒளிகொடுக்க சூரியன் வேண்டும் என்பது சாகிர் நாயிக்கின் வாதம்.
இந்த ஒரு வாதத்தை ஒழுங்காக லித்வின் ஆராய்ந்து இருந்தால் அவளுக்கு கரெக்ட்டாக தெரிந்த சாகிர் நாயிக்கின் வாதங்களிலுள்ள பித்தலாட்டம் வெளிப்பட்டிருக்கும். இப்பொழுது இது புரிந்தாலும் 
நான் ரொம்ப Stubborn ஆன பொண்ணு என்று அவளே அவளைப்பற்றி சொன்னதனால் ஏற்றுக்கொள்வாளா என்பது சந்தேகமே?
கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டிய படிப்பினை
·        கணக்கொப்புவிப்பவராக இருங்கள்
·        சந்தேகங்கள் வந்தால் ஜெபத்துடன் பலரின் உதவியுடன் ஆராய்ந்து தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.
·        மற்றவர்கள் உங்களை கேள்விகேட்க, விமர்சிக்க தாராளமாக இடம் கொடுங்கள்
·        திடீர் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் அதை சரி செய்துகொள்வதற்காக வரட்டு பிடிவாதத்துக்கு இடம்கொடுக்காதிருங்கள்.

(தஃவா பண்ணுகிற குரூபிலிருந்து தொடர்வோம்.)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?