டெக்கானி முஸ்லீம்கள்

இளவரசி வேலைக்காரியானாள்

டெக்கான் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து டெக்கன் சமவெளியை ஆளுகை செய்து வருகிறார்கள், டெக்கான் அரசாங்கம் (ஹைதராபாத்) இந்திய அரசாங்கம் இஸ்லாமிய ஆளுகையிலே 1948 ஆம் ஆண்டு (நிஸாம் ராஜவம்சம்) போய் சேரும் வரையிலே அது ஒரு இளவரச மாநிலமாக இரண்டு நூற்றாண்டுகள் காணப்பட்டது. டெக்கானி என்பவர்கள் ஆளுனர்கள், அரச உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், தச்சர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோரி லிருந்து வந்தவர்களாவார்கள்.

ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைத்ராபாத்தில் அதிகளவிலான டெக்கானி இஸ்லாமியா; (சுமார் 25 இலட்சம்) வசிக்கின்றனர். அவர்களில் 95%  சுன்னி முஸ்லீமாகவும் 5% ஷியா முஸ்லீமாகவும் தங்கள் நம்பிக்கையில் உறுதியான சூபிகள் தாக்கம் கொண்டுள்ளனர்.

குறைந்த சுவிசேஷம் சென்ற பாரிய குழுவினர்

உலகத்திலே பெருங்கூட்டமான டெக்கானி மக்கள் சிறிதளவே சந்திக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திலும், செழிப்பிலுமிருந்து குறைவுபடத்தொடங்கி வறுமையிலும் வசதியற்ற நிலையிலும் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் தேவை. சுவிஷேத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதின் மூலமே இவை கிடைக்கும் என்று அவர்கள் உணர உங்கள் துஆக்கள் இன்றியமையாததாகும்.

கடந்த பல ஆண்டுகளாக சில தஃவா  பணிகளினால் டெக்கானி மக்களில் சிலர் விசுவாசிகளாக இருக்கின்றனர். ஆனாலும் தஃவா பணி மிகவும் மெதுவாக நடைபெறுவது சலிப்பு தன்மையை உண்டாக்கியுள்ளது. இந்திய விசுவாசிகள் இந்த தரிசனங்களையும் பாரங்களையும் பெற்றுக் கொள்ளாவிடில் இம்மக்கள் கூட்டத்தை சந்திப்பது கடின வேலையாகவே தொடர்ந்து இருக்கும்.

துஆ செய்வோம்.

•          இஸ்லாமியர் பரிசுத்த இறைவேதத்தை விசுவாசிக்கின்ற படியால், வேதாகமங்கள் அதிகளவில் வினியோகிக்கப்படும்படி துஆ செய்வோம்.  இறைவார்த்தை மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்.(யோ1:14 “அந்த வாh;த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்,  அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது)


•          இறைவனின் இயற்;கைக்கு அப்பாற்பட்ட சந்திப்பை அவர்கள் பெறவும் அதன்மூலம்ஈஸாவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார் என்ற தரிசனங்களையும் கனவுகளையும் பெற்றுக்கொள்ள துஆ செய்வோம்  (யோ 14:6)

•          விசுவாசிகள் இவர்களைக் குறித்து பாரத்தையும் தரிசனங்களையும் பெற்று அவர்களுக்காக துஆ செய்து, பணிசெய்ய ஆட்களை அனுப்பும்படியாக  துஆ செய்வோம்.  (ரோ 10:14)

•          இஸ்லாமிய அடிப்படைவாத குழுவில் உள்ள அங்கத்தினர்கள், இப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தை சந்திக்க எடுக்கப்படும் முயற்;யை தடுக்கிறார்கள். இதற்காக துஆ செய்வோம். (மத் 5:44)

•          1993-ல் ஹைத்ராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு, இஸ்லாமிய கடத்தல்காரர்களால் மறைமுகமாக நடத்தப்பட்டது. ஐத்ராபாத் கலவரம் மிகுந்த பகுதி என இந்திய அரசாங்கத்தினரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கு மிடையே எந்நேரத்திலும் கலவரம் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இதற்காக துஆ செய்வோம்.






Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?