ஜப்னா முஸ்லிமுக்கு மறுப்பு


கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு

கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு என்று ஒரு கட்டுரையை www.jaffnamuslim.com/2015/04/blog-post_157.html என்ற இணையத்தளத்தில் கண்டேன். அந்த கட்டுரை பாமர இஸ்லாமியரை ஏமாற்றும் ஒரு தந்திரமாக எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிந்தது. ISIS என்பது ஒரு போலியானது. அப்படி ஒரு இஸ்லாமிய குழு இல்லவே இல்லை. இருந்தாலும் அது யூதர்களாக இருக்கலாமே தவிர முஸ்லீம்கள் அல்ல என்பதுபோல் எழுதப்பட்டிருந்தது. அதன் உண்மை நிலையையும் அந்த கட்டுரையிலிருந்து சில அறியாமை கருத்துக்களை புரியவைப்பதற்காகவும் இந்த மறுப்புக் கட்டுரை எளிமையாக வரையப்படுகிறது.

 
மீடியாவுக்கு வராததால் நடக்கவில்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் எவ்வளவு துன்புறுத்தப்படுகிறார்கள். எத்தனை நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். யூசுப் யொஹானா தொடர்ந்து கிரிகெட் விளையாட வேண்டுமானால் இஸ்லாத்தை தழுவுமாறு நிர்பந்திக்கப்பட்டார். எனக்குத் தெரிந்த ஒருவர் மாலை தீவுக்கு வேலைத் தேடிச் சென்றார். அவரிடம் விமான நிலையத்தில் வைத்து சில முல்லாக்கள் மாலை தீவுக்கு வந்ததன் நோக்கத்தை விசாரிக்கின்றனர். கடன் பிரச்சினையால் என்று அவர் சொன்னவுடன் “உனது கடன் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம். அதற்காக நீ சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தழுவினால் போதும்என்று ஆசைக்காட்டியுள்ளார்கள்.
சவுதியை தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் இஸ்லாமிய ஷரீஆ அமுலில் இல்லை என்பதை நான் கூறித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த சவுதியிலும்கூட வேலைக்காக வரும் மாற்று மதத்தினரை மதமாற்றுவதற்கென்றே சம்பளம் கொடுத்து இந்திய மௌலவிகளை மதமாற்ற வேலைக்கு வைத்துள்ளார்கள் என்பதை உலகம் அறியாது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உங்கள் மடைமை! மதமாற்று மையங்கள் (தஃவா) வெளியிடும் புத்தகங்களையாவது படித்துப்பாருங்கள்.
இப்பொழுது மதமாறச் சொல்லி யாரையும் கொலை செய்யவில்லையே என்று நீங்கள் மறுவாதம் புரியலாம். அதற்கு இந்த நாடுகளில் இஸ்லாமிய கிலாபத் ஆட்சி நிகழவில்லை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். ISIS மாத்திரம் தான் நாங்கள் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவியுள்ளோம் என்று சொல்லி குர்ஆன், முஹம்மது நபி காட்டிய முறையில் ஷரீஆவை அமுல்படுத்துகிறார்கள். ஆகவேதான் இப்படி கிறிஸ்தவர்களை கொலையும் செய்கிறார்கள்.
இஸ்லாமி ஷரீஆவை நிறைவேற்ற இஸ்லாமிய கிலாபத் வேண்டும் என்பது பாமர இஸ்லாமியருக்கும் புரியும். இஸ்லாமிய கிலாபத்துக்குள் ஒருவர் வாழவேண்டுமானால் அமீருக்கு பைஅத் செய்து முஸ்லிமாகவேண்டும். அல்லது ஜிஸ்யா எனும் வரியை கட்டவேண்டும். அல்லது கிலாபத்தை விட்டு வெளியேறவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்களை கொலை செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய ஷரீஆவை கற்ற முஸ்லீம்கள் மட்டும் தங்களுக்கு பொத்திப் பொத்தி வைத்திருந்த ஒரு இரகசிம்! இன்று ஈராக், சிரியாவில் இஸ்லாமிய கிலாபத்தை பிரகடனப்படுத்தி, அதன் கலீபாவான அபூபக்கர் அல் பக்தாதி ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதால் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இப்படி மாற்று மதத்தினரை கொலை செய்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.


அங்குமட்டும்தானே இஸ்லாமிய கிலாபத் அமுலில் உள்ளது. மேலும் அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்யும் கொலைகளை வீடியோ எடுத்து அவர்கள்தானே இணையத்தளங்களில் பதிவேற்றுகிறார்கள். 57 முஸ்லிம் நாடுகளும் கிலாபத்துக்குள் வரவேண்டும் என்பதுதானே உங்கள் இலட்சியம்! இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு Sample என்பது தூய இஸ்லாத்தை கற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றாக புரியும்.


நாங்கள் தான் இதை வீடியோ செய்தோம். நாங்கள் தான் இதனை வெளியிட்டோம் அல்லாஹ் அக்பர் என்று ISIS தீவிரவாதிகள் பகிரங்கமாக அறிவிக்கும் போது, அவர்கள் அப்படி செய்திருக்கமாட்டார்கள் என்று அவர்களுக்கு நீங்கள் வக்காளத்து வாங்குவது இன்னும் அறியாமையில் வாழ்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.


இது உங்கள் அறியாமையின் உச்சக் கட்டம். நீங்கள் இஸ்லாமிய நாடு என்று ஒன்று இருப்பது போல் கிறிஸ்தவ நாடு என்று ஒன்று இருக்கும் என்று அறியாமையில் சொல்கிறீர்கள். அமெரிக்கா தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றதால்தான் சதாம் ஹுசைனையும் பின் லாடனையும் அழித்தது. அவர்கள் இருவரும்தான் உண்மையான முஃமீன்கள் என்று நீங்கள் சொன்னால் சவுதியில் உங்களுக்கு தூக்குத்தண்டனைதான் கிடைக்கும். 2000 வருடங்களாக பரம்பரையாக ஈராக்கில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களையும் ஷீஆக்களையும் மனிதாபிமான ரீதியில் உலகின் கவனத்தை ஈர்க்க ஒரு சில நடவடிக்கைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டாலும். அது ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தம்போல் ஆகாது. அப்படி ISIS ஐ அமெரிக்கா அழிக்கவேண்டுமானால் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலை ISIS நடாத்த வேண்டும்.



இங்குதான் உங்கள் அறியாமையின் உச்சக் கட்டம் வெளிப்படுகிறது. நைஜீரியாவில் சோமாளியாவில் ஏன் நம் இந்தியாவில் முகத்தை பார்த்து இவர் கிறிஸ்தவர் இவர் இஸ்லாமியர் என்று அடையாளம் கண்டுவிடமுடியும் என்று நீங்கள் சொன்னால் உங்களை கீழ்ப்பாக்கத்துக்குத்தான் அனுப்புவார்கள். பாரசீக கிறிஸ்தவர்கள் அரபிகள் பக்தாதை கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே பாரசீக வியாபாரிகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வருகை தந்திருப்பதை சரித்திரம் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.
பாரசீகத்தை இஸ்லாம் கைப்பற்றும் போது அரபிகள் பாரசீகருடன் கலந்தாலும் பாரசீகரும் இஸ்லாத்தை தழுவியதால் தோற்றத்தில் கலாச்சாரத்தில் உடையலங்காரத்தில் பாரசீக கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும், ஈஸா முஸ்லீம்களையும் பிரித்துப் பார்க்கமுடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

200 கோடி முஸ்லீம்களும் குர்ஆனை மந்திரமாக ஓதுகிறார்களே தவிற அதில் என்ன எழுதியிருக்கிறது என்றோ அதன்படி வாழவோ முயற்சிப்பதில்லை என்பது புரிகிறது. மேலும் பலர் அறியாமைகால குர்ஆனிய சட்டங்கள் இன்று நடைமுறைக்கு ஒவ்வாது என்று அதனை மறுத்து புதிய சட்டங்களை உருவாக்கி போதித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு, நான் சிறுவயதாயிருக்கும்போது தப்லீக் ஜமாத்தில் கவரப்பட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கத்தில் இமாம் மாற்று மதத்தினருடன் வியாபார தொடர்ப்பை பேணுவது ஹராமாகும்என்று கூறினார். இது இன்றைய காலத்துக்கு ஒத்துவராது என்று யாரும் இதனை பின்பற்றுவதில்லை. இப்படி பல ஷரீஆக்கள் இன்று பலராலும் மறுக்கப்பட்டுவருவது உண்மைதான். அதனால் குர்ஆன் ஹதீஸில் உள்ளதை உள்ளபடி கடைப்பிடிக்கும் ISIS தீவிரவாதிகளை குறைசொல்வதால் இஸ்லாத்தை காப்பாற்ற முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



இதற்கு நான் பதில் எழுதினால் என்னையும் யூத கைக்கூலி என்று சொல்லிவிடுவீர்கள். வஹ்ஹாபி இஸ்லாமியரை சூபி இஸ்லாமியர் யூத கைக்கூலிகள் என்று சொல்வது உலகம் அறிந்த உண்மை! அதன் உண்மை நிலையை அறிவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. 1500 வருடங்களாக இஸ்லாமிய சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் இஸ்லாத்தின் தவறுகளை மறைக்க பலியை யூதர்கள்மீது போடுவதை சிந்திக்கத் தெரிந்தவர்கள் நன்றாக உணர்ந்துகொள்வார்கள்.


அப்படியானால் இந்த குர்ஆன் வசனங்கள் உங்கள் குர்ஆன்களில் இல்லை என்று மறுக்கின்றீர்களா?
2:191. …… (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்;
4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4:91. …….. இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.




Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?